நடிகர் பிரகாஷ் ராஜ், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகாரளிக்கப் பட்டுள்ளது. பெங்களூரு மத்திய தொகுதியில் மக்களவைத் தேர்தலில் சுயேட்சை யாகப் போட்டியிட நடிகர் பிரகாஷ் ராஜ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 12-ம் தேதி ஊடகமும், கருத்துச் சுதந்திரமும் எனும் தலைப்பில் அரசியல் அற்ற நிகழ்ச்சி என அனுமதி பெற்று அதில் மைக் பிடித்து பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜின் வீடியோவை சிலர் மொபைலில் எடுத்து பகிர்ந்துள்ளனர்.
அதே நேரத்தில் அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படையினரும் நிகழ்ச்சியை ரத்து செய்து கூட்டத்தைக் கலைத்தனர். நடிகர் பிரகாஷ் ராஜ் தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறியதமாக கப்பன் பார்க் காவல் நிலையத்தில் மக்கள் பிரதி நிதித்துவச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப் பட்டுள்ளது.
Thanks for Your Comments