சென்னையில் ஏடிஎம் ஊழியர்களை தாக்கி கொள்ளை !

0
சென்னை மதுரவாயல் அருகே கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி ஏடிஎம் ஒன்றில் பணம் நிரப்பிக் கொண்டிருந்த ஊழியர்களை மர்ம நபர்கள் சிலர் மிரட்டி ரூ.10 லட்சத்தை கொள்ளை யடித்து விட்டு மாயமாய் மறைந்தனர்.
சென்னையில் ஏடிஎம் ஊழியர்களை தாக்கி கொள்ளை


இந்த ஏடிஎம் கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் இந்த கொள்ளை தொடர்பாக இன்று மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர். 

அவர்களில் ஒருவர் சென்னை கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவி என்பது திடுக்கிடும் செய்தி ஆகும்

இந்த கொள்ளை வழக்கில் நைஜீரியாவைச் சேர்ந்த அக்யோ மாயே, அமு மற்றும் சென்னை கல்லூரி மாணவி கிரியா ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ளதாக வும், அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)