தமிழக்கத் தில் மக்களவை தேர்தலுக்கு திமுக கூட்டணி அமைத்து விட்டது. அதிமுக இன்னும் கூட்டணியை இறுதி செய்ய வில்லை. தேமுதிக வால் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இதே போல், அதிமுக வில் இருந்து பிரிந்து வந்த டிடிவி தினகரன் அணி தேர்தலில் தனி அணியில் போட்டி யிடுகிறது.
இது குறித்து இன்று செய்தி யாளர்களை சந்தித்த அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறும் போது, எங்கள் கூட்டணி யில் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப் பட்டுள்ளது. இன்னும் ஒரு கட்சியுடன் பேச்சு வார்த்தை நடக்கிறது.
இந்த இரண்டு கட்சிகளு க்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப் படும். மீதம் உள்ள 38 இடங்களில் அமமுக போட்டியிடும். கூட்டணி தொடர்பாக பல கட்சிகள் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தின. நாங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு எதிரான நிலைப் பாட்டில் உள்ளவர் களுடன் கூட்டணி வைக்க விரும்ப வில்லை.
ஆனால் ஜெயலலிதா வுக்கு எதிராக மோசமாக பேசியவர் களுடன் எடப்பாடி பழனி சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூட்டணி வைத்துள்ளனர். எனவே அவர்கள் அணிக்காக ஜெயலலிதா படத்தை பயன்ப டுத்தக் கூடாது.
அதிமுக வின் ஒரு அணி தான் அமமுக. என்று குறிப்பிட்டு இருப்பதால் கட்சியின் பெயரை பதிவு செய்ய வில்லை. தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கி றார்கள், நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறியுள்ளார்.
Thanks for Your Comments