தாக்க வந்த கணவனை கொன்ற மனைவி !

0
கோவையை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், மது அருந்தி விட்டு தன்னை தாக்க முயன்ற தனது கணவரிட மிருந்து தப்ப முயன்ற போது ஏற்பட்ட சண்டையில் கணவரை கொன்ற தாகவும். அதனால் அந்த பெண் எலி மருந்து அருந்தி தற்கொலை செய்ய முயன்றதாக காவல் துறையினர் தகவல் அளித்தனர்.
தாக்க வந்த கணவனை கொன்ற மனைவி
சில மாதங்களு க்கு முன்னர் பாபுராஜ் (37) அவரது மனைவி பாக்கியம் மற்றும் குழந்தை களிடமிருந்து பிரிந்து மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். 


இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமையன்று மதியம் சுமார் 2 மணிக்கு பாக்கியத்தின் வீட்டுக்கு சென்ற பாபுராஜூ க்கும் அவரது மனைவி பாக்கி யத்திற்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் தனது கையில் இருந்த மது பாட்டிலை பயன்படுத்தி பாக்கிய த்தை தாக்க முயன்றார்.

அப்போது பயத்தில் பாக்கியம் அங்கிருந்த கட்டையை பயன்படுத்தி பாபுராஜை தாக்கினார், செய்த கொலையின் விளைவை அஞ்சி பாக்கியம் விஷத்தை அருந்த முயன்ற தாக காவல் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் தனது பெற்றோரை இப்படி கண்ட மகள் அருகில் வசித்தவர் களை அழைத்ததால் அவர்கள் பாபுராஜ் மற்றும் பாக்கி யத்தையும் மருத்துவ மனையில் அனுமதித்தனர். 

மருத்துவ மனைக்கு வரும் முன்னரே பாபுராஜ் இறந்து விட்ட நிலையில் பாக்கியம் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவ மனையில் உள்ளார்.


Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)