நமக்கு தூக்கம் ஏன் ஏற்படுகிறது? விஞ்ஞானிகள் கண்டரிந்த உண்மை !

தூக்கம் ஏன் ஏற்படுகிறது? என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தங்கள் கண்டரிந்த உண்மைகளை வெளியிட்டிருக் கிறார்கள்.  
நமக்கு தூக்கம் ஏன் ஏற்படுகிறது? விஞ்ஞானிகள் கண்டரிந்த உண்மை !
நம் உடலில் உள்ள உறிப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. 

நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன. 
நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதியில் எதிர்ப்பு ஏற்பட்டு, செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர். 

இன்னும் சில விஞ்ஞானிகள், நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களாகிய 

லாக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப் படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம் தான் தூக்கமாகும் என்கின்றனர். 
நமக்கு தூக்கம் ஏன் ஏற்படுகிறது? விஞ்ஞானிகள் கண்டரிந்த உண்மை !
இதையே நாம், களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம். 

நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இனைப்புகள் தடைபடுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 
மூளையின் ஹைப்போ தலாமஸ் பகுதியே தூக்கத்தைக் கட்டுப் படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திர மாகும் என்று சிலர் கூறுகின்றனர்.

தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசிய மானது என்பதை நிருபிக்க விஸ்கான்சின் மருத்துவப் பல்கலைக் கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. 

அச்சோதனை யில் தெரிய வந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லை யென்றால் விலங்குகள் இறந்து விடும். 

விலங்குகளால் தூக்க மில்லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரை தான் உயிர்வாழ முடியும்.

மனிதர் களுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். இல்லா விட்டால் நோய் வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின்றனர். 
மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்க வேண்டும் என்று கண்டு பிடித்துக் கூறப்பட்டுள்ளது. 
நமக்கு தூக்கம் ஏன் ஏற்படுகிறது? விஞ்ஞானிகள் கண்டரிந்த உண்மை !
குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதிப்பிக்கப் படுவதற்கும் அதிக நேரம் தூங்க வேண்டும். 

மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. 
அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் தினசரி நான்கு அல்லது ஐந்து மணி நேரம் தான் தூங்குவார்.
Tags: