புல்வாமா தாக்குதலில் நடந்தது என்ன? தெரியுமா? - வீடியோ !

0
ஜம்மு, சன்னை ராம ட்ரான்சிஸ்ட் கேம்ப்பிலிருந்து (channi rama transit camp) 78 பேருந்துகளில், சுமார் 2500 ஜவான்கள் ஸ்ரீநகர், பக்‌ஷி ஸ்டேடியம் ட்ரான்சிஸ்ட் கேம்பிற்கு (bakshi stadium transit camp) செல்வது தான் பயணத்தின் நோக்கம். பிப்ரவரி 14 காலை 3.30 மணிக்கு தொடங்கியது இந்த பயணம்... 
புல்வாமா தாக்குதல்
ஒரே நேரத்தில் எப்படி இத்தனை வீரர்களை அனுப்பினார்கள் என்ற கேள்வி எழலாம். முந்தைய நாட்களிலேயே ஒவ்வொரு பிரிவாக பயணத்தை தொடங் கியிருக்க வேண்டும். அந்த பகுதிகளில் பாதுகாப்பு உறுதி செய்யப் படாததால் முன்னர் கிளம்ப வேண்டிய பிரிவுகளும் அப்படியே தங்கின. 


பின்னர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்பு அனைவரும் புறப்பட் டுள்ளனர். கிட்டதட்ட இலக்கை நெருங்கி விட்டனர், இன்னும் 30 கிலோ மீட்டர்களே இருந்த நிலையில், காக்காபோரா, லேல்கர் இணைப்பு சாலையி லிருந்து ஒரு எஸ்.யு.வி. வாகனம், சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் வந்து கொண்டிருந்த சாலைக்கு அருகிலுள்ள சாலையில் வந்தது... 

சி.ஆர்.பி.எஃப். படை வாகனங் களுக்கு என ஒரு பாதையும், பொதுமக்கள் செல்வதற்கென ஒரு பாதையும் தனித்தனி யாக இருந்தது. இரண்டிற்கும் இடையில் செண்டர் மீடியன் (centre median) எனப்படும் இடைவெளி மட்டுமே இருந்தது.

மாலை 3.30 மணிக்கு திடீரென அந்த எஸ்.யு.வி. வாகனம் அந்த செண்டர் மீடியனை தாண்டி, ராணுவ வீரர்கள் வந்த 5 -வது பேருந்தின் இடப்பக்கத்தில் இடித்தது. அப்போது காருக்குள் அதற்குள் இருந்த வெடிபொருட்கள் வெடித்தன. இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 45 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உயிரிழந் துள்ளனர். 

30 -க்கும் மேற்பட்டோர் காய மடைந்துள்ளனர். அந்த வாகனத்தில் கிட்டதட்ட 150 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் பயன் படுத்தப்பட்டு இருக்கலாம் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. இந்த தற்கொலை தாக்குதல் நடத்திய அகமது தார் என்பவனின் உடல் 80 மீட்டர் தூரத்தில் காணப்பட்டது. 
சி.ஆர்.பி.எஃப். படை
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷி முஹமத் இயக்கம் பொறுப் பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதல் குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் உள்ளன. ஆனால் ஒருவரின் கூற்று இங்கு முக்கியமாக பார்க்கப்பட வேண்டி யுள்ளது. 

அவர் தான் சி.ஆர்.பி.எஃப் செய்தித் தொடர்பாளர் ஆஷிஸ் குமார் ஜா. அவர் இந்தியா டுடே க்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார். வீரர்கள் வந்த பேருந்து மிக வேகமாக தங்களது இலக்கை அடைந்து கொண்டி ருந்தது. 

ஏறக்குறைய ஒரு வாரம் ஜம்மு -ஸ்ரீநகருக்கு இடையேயான நெடுஞ் சாலையில் போக்குவரத்து முதலான அனைத்து நடமாட்டங்களும் கண்காணிக்கப் பட்டது. இவைகளுக்கு பின்னரே, நேற்று வீரர்கள் தங்களது பயணத்தைத் தொடங்கினர். 


வீரர்கள் பயணிக்க அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப் பட்டது. அந்த நெடுஞ்சாலையில் இப்படியொரு தாக்குதல் நடக்க வாய்ப்பே கிடையாது. இந்தப் பகுதியில் நிறைய சோதனைச் சாவடிகள் உள்ளன. 

அவை அத்தனையையும் தாண்டி நூற்றுக் கணக்கான கிலோ அளவுள்ள வெடிப் பொருள்களைக் எடுத்துவர முடியாது. பாதுகாப்புப் பணிகளில் ஏதோ தவறு நடந்துள்ளது. இல்லை யென்றால், இது போன்ற சம்பவம் நடந்திருக்காது. 

இது தொடர்பாக நிச்சயம் விசாரணை நடத்தப்படும்’. தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பிருக் கிறது என ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் எங்களுக்குக் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 
வெடிகுண்டு தாக்குதல்
ஆனால், எந்த இடத்தில் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதை குறிப்பிட்டுக் கூறவில்லை". என மூத்த அதிகாரி ஒருவர் தி இந்துவிற்கு (ஆங்கிலம்) பேட்டி யளித்துள்ளார்.

மேலும், கடந்த 13 ஆம் தேதி அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு வெளியிட்ட பயண எச்சரிக்கை குறிப்பில், காஷ்மீர் பகுதிக்கு செல்லாதீர்கள், அங்கு ஆயுத சண்டைக்கான வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளது. யாரோ சிலரின் கவனக்குறைவு, விலைமதிப்பற்ற உயிர்களை விலையாக பெற்றுள்ளது... தி இந்து
வீடியோ...
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)