திருநங்கை தலையை வெட்டி எடுத்த இளைஞர் !

0
தமிழகத்தில் கோவிலுக்குள் வைத்து அத்துமீறிய நிர்வாகியை தட்டிக் கேட்ட திருநங்கை யான பூசாரி, தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தூத்துக்குடியில் உள்ள தேவி ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் கோவிலில் ராசாத்தி என்ற திருநங்கை பூசாரியாக இருந்து வந்தார்.
திருநங்கை தலையை வெட்டி எடுத்த இளைஞர்


வெள்ளிக் கிழமை மாலை கோவிலின் அருகில் நின்று கொண்டிருந்த ராசாத்தியை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். தலையை துண்டித்து எடுத்துச்சென்ற கொலை யாளிகள், மற்றொரு பகுதியில் தலையை வீசிச்சென்றனர்.

ராசாத்தி கொலை தொடர்பாக மாரியம்மன் கோவிலை கட்டிய மூதாட்டியின் பேரன் மருது என்ற இளைஞரை பிடித்து விசாரித்த போது, கொலைக் கான காரணம் தெரிய வந்தது. மூதாட்டிக்கு பின்னர், இந்த கோவிலை பூசாரியாக இருந்து திருநங்கை ராசாத்தி நிர்வாகித்து வந்துள்ளார். 

மூதாட்டியின் பேரன் மருது செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார். ராசாத்தி பக்தர்களு க்கு அருள்வாக்கு சொல்வதால் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சென்றுள்ளனர்.

கோவிலில் கிடைத்த வருமானம் மூலம் மருதுவுக்கு கோவிலுக்கு அருகில் பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து கொடுத் துள்ளார் ராசாத்தி. இந்நிலையில் ராசாத்தியை சந்திக்க வரும் திருநங்கைகள் சிலரிடம் மருது அத்து மீறுவதை வழக்கமாக்கி உள்ளார். 
திருநங்கை


ஒரு கட்டத்தில் கோவிலு க்குள் இந்த நிகழ்வுகள் நடப்பதை அறிந்த ராசாத்தி, மருதுவை எச்சரித்ததோடு கோவில் நிர்வாகத்தில் இருந்தும் விரட்டி யடித்துள்ளார். மேலும் கோவிலின் வரவு செலவு களையும் ராசாத்தி பார்த்து வந்துள்ளார்.

கோவில் மூலம் கிடைத்த வருமானம் பாதிக்கப் பட்டதால் ஆத்திர மடைந்த மருது தனது கூட்டாளியுடன் சென்று ராசாத்தியை அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தலையை எடுத்துக் கொண்டு தப்பியதாக காவல் துறையினர் தெரிவித் துள்ளனர்.

மருதுவை பிடித்து விசாரித்து வரும் காவல் துறையினர் கொலைக்கு உடந்தையாக இருந்த கூட்டாளியை தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)