பிரதமர் பதவிக்கு போட்டியிட தாய்லாந்து மன்னர் எதிர்ப்பு !

0
தாய்லாந்தில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஆட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. 
தாய்லாந்து மன்னர்


பிரதமரை பதவி விலகக்கோரி நடந்த போராட்டங் களில் பெரும் வன்முறை வெடித்தது. இதற்கிடையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச் சாட்டில் யிங்லக் ஷினவத்ராவின் பிரதமர் பதவியை பறித்து அந்நாட்டு அரசியல் சாசன கோர்ட்டு உத்தர விட்டது. 

அதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தக மந்திரி நிவாட்டம்ராங் பூன்சாங் நியமிக்கப் பட்டார். ஆனால் வலுவான தலைமை இல்லாததால் பெரும் அரசியல் குழப்பம் எழுந்தது. இதை யடுத்து அந்நாட்டின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ தளபதியாக இருந்த பிரயாட் சான்ஓசா பிரதமராக பொறுப்பேற்றார். 

நாட்டின் சட்டம், ஒழுங்கு சரியாகும் வரை மட்டுமே ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என கூறிய நிலையில், அங்கு ராணுவ ஆட்சியே தொடர்ந்தது. பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங் களில் குதித்தனர். 

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப் படுவது வாடிக்கை யானது. இந்த நிலையில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனை தொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24-ந்தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

ஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்தி வைக்கப் பட்டது. அதன்படி 500 உறுப்பினர் களை கொண்டு தாய்லாந்து நாடாளு மன்றத்துக்கு அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது. ராணுவ ஆட்சி கொண்டு வரப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பொதுத் தேர்தல் என்பதால் அரசியல் கட்சியி னரிடமும், தாய்லாந்து மக்களி டமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டி யிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று உப்லோரட்டனா மஹிடோல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், பிரதமர் பதவிக்கு இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் போட்டியிடுவதற்கு தாய்லாந்து மன்னர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இளவரசி பிரதமர் பொறுப்புக்கு போட்டி யிடுவது என்பது அரச மரபுகளுக்கு எதிரானது என்று தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலோங்கோன் தெரிவித்தார். 

மன்னரும், அரச குடும்பத்தினரும் அரசியலுக்கு மேலான அந்தஸ்தில் இருப்பவர்கள் என்று அரண்மனை அறிக்கை வெளி யிட்டுள்ளது. இளவரசி உப்லோரட்டனா மன்னர் வஜ்ரலோங்கோனின் மூத்த சகோதரி ஆவார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)