நெஞ்சு எரிச்சல் உண்டாக்கும் பாதிப்புகள்?

0
நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். தற்சமயம் நிறைய பேர் நெஞ்சு எரிச்சல் (நெஞ்சு கரிப்பு) காரணமாக மாத்திரை தொடந்து சாப்பிட்டு வருகிறார்கள். ஆனால் இது அவர்களுக்கு நிரந்தர தீர்வை தருவதில்லை. தற்காலிக நிவாரணம் (Temprorary Relief) மட்டுமே.
நெஞ்சு எரிச்சல்
EThanthi.com

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு எது தேவைப்படுகிறது. இரைப்பையில் உட்சுவரின் குழிகளில் சுரக்கும் இரைப்பை நீர் (Gastric Juice) உணவோடு சேர்ந்து செரிமானத்திற்கு உதவுகிறது.

ஒரு நாளைக்கு இரைப்பை நீர் சுரப்பி 1.5 லிட்டரிலிருந்து 2 லிட்டர் வரை நீர் சுரக்க வேண்டும். அப்படி குறையும் போது வயிறு செரிமானம் ஆவதில்லை. வயிறு செரிமானம் ஆகவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா?.

நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் எப்படி கிடைக்கும். இரத்தம் உற்பத்தி எப்படி ஏற்படும்?.

இரத்தம் இல்லை என்றால் உடல் சோர்வு, பசியின்மை, வாயு சிக்கல் (Gas Trouble) என்று பல விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். அதனால் நாம் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்க முடியாது.
வாயு சிக்கல்
EThanthi.com

அது மட்டும் அல்லாமல் பசிக்காமல் சாப்பிடுவோம். அதுவும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே நெஞ்சு எரிச்சல் தானே என்று சாதாரணமாக விட்டுவிடாதீர்கள். சிறியது தான் பெரியதாக மாறும்.

எனவே இரைப்பைச்சாறு (Gastric Juice) சுரப்பி ஏற்பட என்ன சாப்பிடலாம் என்றால் நார்சத்து உள்ள காய்கறிகள், கொய்யாப்பழம் மற்றும் (திராட்சை Juice) தினமும் ஒரு குவளை குடித்து வந்தால் மாற்றம் ஏற்படும்.

நன்றாக பசி எடுக்க ஆரம்பிக்கும். உடம்புக்கு தேவையான பல சத்துகள் கிடைக்க ஆரம்பித்து விடும். இதனோடு துளையீட்டு மருத்துவமுறை ஊசி (acupuncture Needle) போட்டால் விரைவாக சரி செய்யலாம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)