பள்ளி மாணவிக்கு வகுப்பறையிலேயே தாலி கட்டிய மாணவன் !

0
தமிழகத்தில் காதலிக்க மறுத்த மாணவிக்கு, மாணவன் பள்ளி வகுப்பறை யில் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு, அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,200 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
பள்ளி மாணவிக்கு வகுப்பறையிலேயே தாலி கட்டிய மாணவன் !


இப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், தன்னுடன் படிக்கும் சக மாணவியை ஒருதலையாக காதலித் துள்ளான். கடந்த நான்கு நாட்களுக்கு முன், மதிய உணவு நேரத்தில் வகுப்பறையில் அந்த மாணவியின் கழுத்தில் மாணவன் வலுக்கட்டாய மாக தாலி கட்டி யுள்ளான்.

அதிர்ச்சி யடைந்த மாணவி வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் இது குறித்து கூறினார். இதை யடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியில் திரண்டு, ஆசிரியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

அந்த மாணவனை பள்ளியில் இருந்து நீக்குமாறும் அறிவுறுத்தினர். இச்சம்பவம் குறித்து பொலிசார் பள்ளியில் நடத்திய விசாரணை யில் மாணவன் தாலி கட்டியது உண்மை என தெரிந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், இதில் தொடர்புடைய மாணவி, பள்ளியில் தேர்வு எழுதி வருகிறார்.

அவரிடம் விசாரித்ததில் இல்லை என கூறுகிறார். அந்த மாணவன், பள்ளிக்கு வராமல் விடுமுறையில் உள்ளான். மாணவன் பள்ளிக்கு வந்தால் விசாரணை செய்யப்படும் என கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)