கனடாவில் அடைக்கலமான சவுதிப் பெண் !





கனடாவில் அடைக்கலமான சவுதிப் பெண் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
பெற்றோர் களால் கொடுமைக்கு ஆளாக்கப் படுவதாக தப்பி வந்த சவுதி பெண் ரஹாப் மொகமது அல் குனான் கனடாவில் அடைக்கலம் ஆனார். கடந்த வாரம் ரஹாப் மொகமது அல் குனானுக்கு அடைக்கலம் அளிக்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ தயாராக இருப்பதாக கூறிய நிலையில் சனிக் கிழமையன்று கனடா சென்றடைந்தார் ரஹாப்.
கனடாவில் அடைக்கலமான சவுதிப் பெண் !


டோரோன்டோவில் விமான நிலையத்தில் ரஹாப்பை வரவேற்ற கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் கிரிஸ்டியா கூறும் போது, “இவர் தான் ரஹாப் கனடாவின் தைரியமான குடிமகள்” என்று தெரிவித்தார். ரஹாப்புக்கு அடைக்கலம் அளித்த கனடா அரசை சர்வதேசப் பெண்கள் நல அமைப்புகள் பாராட்டி யுள்ளன.

யார் இந்த ரஹாப் மொகமது அல் குனான்?
ரஹாஃப் மொகமது அல் குனான் (18) குவைத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது தனது குடும்பத்தி னரிடம் இருந்து தப்பி வந்துள்ளார். தனது குடும்பத்தினர் தன்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கொடுமைப் படுத்திய தாகக் கூறிய ரஹாஃப், அவர்களிடம் இருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முடிவெடுத்து 

இதற்காக தாய்லாந்தில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையம் வந்தவரை சவுதி மற்றும் குவைத் அதிகாரிகள் சுற்றி வளைத்த தாகவும் அவரின் பயண ஆவணங் களைப் பிடுங்கிக் கொண்ட தாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து ஞாயிற்றுக் கிழமை குனான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ரஹாஃப், ''குவைத்து க்கு என்னை நாடு கடத்துவதற்காக குவைத் ஏர்வேஸ் விமானத்தில் அனுப்ப முடிவு செய்திருக் கின்றனர்.

இதை நிறுத்துமாறு தாய்லாந்து அரசிடம் கேட்கிறேன். தாய்லாந்து காவல் துறையினர் எனக்குப் புகலிடம் அளிக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும். மனிதத்தோடு எனக்கு உதவுமாறு கேட்கிறேன்'' என்று தெரிவித் திருந்தார்.


இதனை ஏஎஃப்பி செய்தி நிறுவனமும் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தந்தை அப்பெண்ணை திரும்ப அனுப்பி வைக்கும் படி கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில், ”புகலிடம் கேட்கும் ஒருவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் போது, அவரை சொந்த நாட்டுக்கு அனுப்பக் கூடாது” ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை அறிக்கை வெளியிட்டி ருந்தது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)