கும்பகோணம் உள்ள சென்னை சில்க்ஸில் ஆட்சியர் ஆய்வு !

0
கும்பகோணத்தில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடை அமைந்துள்ள கட்டடம் விதி முறைகளை மீறி கட்டப் பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இன்று அக்கடைக்கு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டார்..
கோணம் மேம்பாலம் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு அதில் சென்னை சில்க்ஸ் துணிக்கடை திறக்கப் பட்டது. 


ஆனால் துணிக் கடையின் கார் நிறுத்துமிடம் மற்றும் திறந்தவெளி ஆகிய வற்றுக்கு அனுமதி பெற்ற அளவிலான இடம் விடவில்லை என்று செல்வராஜ் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த மனு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியரு க்கு உத்தர விட்டது.
அதன்படி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு அதிகாரிகள் இன்று சென்னை சில்க்ஸ் கடை அமைந்துள்ள இடம் மற்றும் கட்டடத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர் .

அனுமதி பெற்ற அளவில் கட்டடம் கட்டப் பட்டுள்ளதா எனவும் அளவீடு செய்து ஆய்வுகள் மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)