பள்ளி வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து 6 குழந்தைகள் பலி - ஓட்டுநரின் அலட்சியம் !

0
ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிர்மாவூர் மாவட்டம், சங்ராஹ் பகுதியில் உள்ள தேவ் பப்ளிக் பள்ளியில் குழந்தைகளுக் காகத் தனியார் பேருந்து இயக்கப் படுகிறது. இந்த மாவட்டம், தலைநகர் சிம்லாவில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ளது.
இன்று காலை வழக்கம் போல பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வாகனம் செல்லும் போது சிர்மாவூர் பகுதியில் எதிர் பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்து, 


அருகில் இருந்த பள்ளத் தாக்கில் பாய்ந்தது. இந்தக் கோர விபத்தில் 6 குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டுநர் என 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ ந்துள்ளனர். 

மேலும், 12 குழந்தைகள் படுகாயங் களுடன் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மிகவும் கவலைக் கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்து ஓட்டுநரின் அலட்சியத் தால் மட்டுமே நிகழ்ந்துள்ள தாகக் காவலர்கள் தெரிவித் துள்ளனர்.

மேலும்
விபத்தில் உயிரிழந்த வர்கள் சமீர் (5) அதார்ஸ் (7) கார்த்திக் (14) அமிஷேக், சஞ்சனா, நைட்டிக் சௌதான் ஆகிய குழந்தைகள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)