ஏவுகணை சோதனையை உறுதி செய்த ஈரான் !

0
நடுத்தர தொலைவு ஏவுகணையை அண்மை யில் சோதித்துப் பார்த்ததை ஈரான் ஒப்புக் கொண் டுள்ளது.



இது குறித்து அந்த நாட்டு அதிகாரி களை மேற்கோள் காட்டி, பர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித் துள்ளதாவது,

நடுத்தர தொலைவு ஏவுகணையை செலுத்தி ஈரான் இந்த மாதம் 1-ம் தேதி சோதனை யில் 

ஈடுபட்டதாக வெளியான தகவல் உண்மை என அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். 

ஈரான் தனது ஏவுகணை பரிசோதனை களைத் தொடரும் எனவும், 

அண்மை யில் நடந்துள்ள சோதனை மிகுந்த முக்கியத் துவம் வாய்ந்தது எனவும் 

ஈரான் ராணுவத் தின் வான்மண்டலப் பிரிவு தளபதி அமீரலி ஹாஜிஸாதே கூறினார். 



இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. 

இந்த விவகாரம் அந்த நாட்டை மிகவும் கவலை யடையச் செய்துள்ளது 

என்பதைக் காட்டுகிறது என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித் துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)