அனஸ்தீஸ்யா கொடுத்தால் என்ன நடக்கும் தெரியுமா?

0
சமீப காலங்க ளாக பெரும் பாலானோரு க்கு சர்வ சாதரண மாக சிசேரியன் அறுவை சிகிச்சையின் மூலமே குழந்தை பிறக்கிறது.
அனஸ்தீஸ்யா
பிரசவ வலியே தெரியாமல் இருக்கவும் அறுவை சிகிச்சை மேற் கொள்ளவும் கர்பிணி களுக்கு அனஸ்தீஸ்யா கொடுக் கப்படும். Epidural எனப்படும் அனஸ்தீஸ்யா தான் பெரும்பாலும் பயன் படுத்தப் படுகிறது. 

இது உடலில் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களு க்கு மதமதப்பான உணர்வைத் தருகிறது. இதனைப் பற்றி இன்னும் விவரமாக வும் அதன் விளைவு களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அனஸ்தீஸ்யா என்ன செய்யும் :

இது உடலில் செலுத்தப் பட்டால் அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் மதமதப்பாகச் செய்திடும் இதனால் வலியை நம்மால் உணர முடியாது.

இதன் முக்கிய நோக்கமே வலியை உணரச் செய்யக்கூடாது என்பது தான். முதுகுத் தண்டில் இருக்கும் நரம்பில் இந்த அனஸ்தீஸ்யா ஊசி போடப்படும். 
அனஸ்தீஸ்யா என்ன செய்யும்
கீழ் முதுகில் இந்த ஊசி போடப் படுவதால் அரை மணி நேரத்தில் இடுப்பி லிருந்து கால் வரை மதமதப்பாக இருக்கும். அப்போது வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்து விடுவார்கள்.

நான்கு முதல் எட்டு மணி நேரத்திற்குள் அன்ஸ்தீஸ்யா குறைந்த மெல்ல மெல்ல அந்த வலியை உணர ஆரம்பிப்பீர்கள்.

கவனிக்க :

bupivacaine, chloroprocaine, lidocaine ஆகிய வற்றை சரியான விகிதத்தில் சேர்த்து கொடுக்க வேண்டும்.  முறையான மருத்துவ ஆலோசனை யுடன் மட்டுமே இதனை மேற்கொள்ள வேண்டும்.

இது உடலில் செலுத்தியவுடன் பிரசர் சரிபார்க்க வேண்டும். இந்த ஊசி கொடுத்தவுடன் லோ பிரசர் ஆகும் என்பதால் ட்ரிப்ஸ் ஏற்றப்படும். 
லோ பிரசர்
இது போடப்படும் போது ஒரேயிடத்தில் குத்துகிற மாதிரியான வலி ஏற்பட்டாலோ அல்லது ஷாக் அடிப்பது போல உணர்ந்தாலோ உடனடியாக மருத்து வரிடம் சொல்ல வேண்டும். 

எபிடியூரல் ஸ்பேஸில் தான் ஊசி போடப்பட வேண்டும். அதிலிருந்து சற்று விலகி ஊசி போடப் பட்டால் மேற்சொன்ன விளைவுகள் ஏற்படும்.

இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். இடது பக்கமாக திரும்பி முதுகை முடிந்தளவு வளைத்தோ அல்லது உட்காரச் சொல்லி முன் பக்கமாக குனியச் சொல்லியோ தான் இந்த அனஸ்தீஸ்யா போடப்படும். 

இப்படிச் செய்வதால் இதன் தீவிரம் இருக்கும். Regular Epidural மற்றும் Combined Spinal-Epidural (CSE) என இன்றைக்கு இரண்டு வகையான அனஸ்தீஸ்யா பயன்படுத்தப்படுகிறது.


சிறுநீர் :
சிறுநீர்
இது இடுப்பி லிருந்து கால் முழுமைக்கும் மதமதப்பு உணர்வை ஏற்படுத்தி விடுவதால் சிறுநீர் பைக்கும் மதமதப்பு உணர்வே இருக்கும்.

சிறுநீர் பை எப்போது நிரம்பியது, எப்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு தோன்றாது. மதமதப்பு குறைந்தவுடன் இது நார்மலாகிடும்.

குறைந்த ரத்த அழுத்தம் :
குறைந்த ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தம் குறைவது சாதரணமாக எல்லாரு க்கும் இருக்கும். இந்த ஊசி நரம்பில் போடப்படுவ தால் ரத்த வோட்டம் குறையும். உங்களின் ரத்த அழுத்தம் தொடர்ந்து கண்காணி க்கப்படும்.

சருமம் :
சருமம்
அனஸ்தீஸ்யா கொடுப்பதால் சிலருக்கு சருமத்தில் அலர்ஜி ஏற்படவும் வாய்புண்டு. ஆரம்ப காலத்திலேயே மருத்துவரிடம் காண்பித்தால் எளிதாக தீர்த்திடலாம்.

முதுகு வலி :
முதுகு வலி
முதுகில் இந்த ஊசி போடப்பட்டு கிட்டதட்ட எட்டு மணி நேரம் வரை மதமதப்பாக இருக்கச் செய்து பின்னர் சீராவதால் பலருக்கும் முதுகு வலி ஏற்படும். கடினமான பொருட்களை தூக்குவதா லும் பெரும்பாலா னோருக்கு முதுகு வலி ஏற்படும்.

தலைவலி :

முதுகுத்தண்டில் போடப்படும் அனஸ்தீஸ்யா ஊசியினால் போடப் படுவதால் சிலருக்கு தலைவலி ஏற்படும். post-dural puncture headache என்றும் இதனை சொல்வார்கள்.

சிசேரியன் செய்யப் படுகிற பெண்களில் ஒரு சதவீதத்தி னருக்கு தலைவலி ஏற்படுகிறது. முதுகுத் தண்டில் ஸ்பைனல் ஃப்ளூயிட் லீக் ஆவதால் தலைவலி ஏற்படுகிறது.
தலைவலி

பொது :
நரம்பு கோளாறு
இதைத் தவிர, ஃபிட்ஸ், நரம்பு கோளாறு ஏற்படும் . இது மிகவும் அரிதான ஒன்று தான்.

ஆனாலும் முறையான மருத்துவ ஆலோசனை யுடன் மட்டுமே அனஸ்தீஸ்யா கொடுக்கப் படுகிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)