வீடு புகுந்து பெண்களை மிரட்டி பலாத்காரம் - இளைஞரின் பகீர் வாக்கு மூலம் !

0
அம்பத்தூ ரில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் பலாத்கார த்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 


அம்பத்தூர் தொழிற் பேட்டை, கொரட்டூர், முகப்பேர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் 

வீட்டை உடைத்து கொள்ளை யடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 

இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரில், அம்பத்தூர் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், பட்டரை வாக்கத்தில் நேற்றிரவு வாகன சோதனை யில் ஈடுபட்ட போலீசார், 

இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை மடக்கி பிடித்து விசாரித்தனர். 

முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த அவரை, அம்பத்தூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணை யில், அந்த நபர், ஆவடியை அடுத்த திரு முல்லை வாயலை சேர்ந்த அறிவழகன் என்பதும், 

அவர் மீது வேளச்சேரி, கிண்டி குமரன் நகர் காவல் நிலையங் களில் 15 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

மேலும், வீடு புகுந்து திருடுவது, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பலாத்கா ரத்தில் 


ஈடுபட்டது போன்ற செயல் களில் ஈடுபட்டு வந்ததையும், விசாரணை யில் அறிவழகன் ஒப்புக் கொண்ட தாக போலீசார் கூறினர். 
இதை யடுத்து, அறிவழகனிடம் இருந்து 25 சவரன் தங்க நகை மற்றும் இரு சக்கர வாகனத்தை 

பறிமுதல் செய்த போலீசார், அம்பத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)