முத்துப்பேட்டையில் தீ மூட்டி மின் கம்பம் சீரமைக்கும் பணி - பாராட்டும் மக்கள் !





முத்துப்பேட்டையில் தீ மூட்டி மின் கம்பம் சீரமைக்கும் பணி - பாராட்டும் மக்கள் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை பகுதியில் கஜா புயலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் அனைத்து மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தது. 


இதனால் 27 நாட்கள் கடந்தும் 900க்கும் மேற்பட்ட மின் பணியா ளார்கள் இரவு, 

பகல் பாராமல் சீரமைப்பு பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். 

இருந்தும் இன்னும் பேரூராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சீரமைப்பு பணிகள் 

முழுமை யடையாமல் உள்ளதால் மக்கள் மின்சார மில்லாமல் பெரும் அவதிக் குள்ளாகி யுள்ளனர்.

இந்நிலையில் முத்துப் பேட்டை அடுத்த மங்கலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 


பணியின் போது வெளிச் சத்துக்கு அருகில் கிடந்த விறகுகளை கொண்டு தீயை மூட்டி 

அதில் ஏற்படும் வெளிச்ச த்தை கொண்டு அர்ப் பணிப்புடன் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். 

இதனை அப்பகுதி மக்கள் தங்களது பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)