பழமையான எகிப்து ராஜ குருவின் கல்லறை கண்டுபிடிப்பு !





பழமையான எகிப்து ராஜ குருவின் கல்லறை கண்டுபிடிப்பு !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
எகிப்து நாட்டில் தலைநகர் கெய்ரோ அருகில் புதைபொருள் ஆராய்ச்சி யாளர்கள், புதைபொருள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.


இதில் 4 ஆயிரத்து 400 ஆண்டு களுக்கு முந்தைய பழமை யான கல்லறை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 

இந்தக் கல்லறை, சக்காரா பிரமிட் வளாகம் அருகே கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இந்தக் கல்லறை, அங்கு வாழ்ந்து மறைந்த வாட்யே என்னும் அரச குருவுக்கு (ராஜ குருவுக்கு) உரியது என தெரிய வந்துள்ளது. 
அந்தக் கல்லறை யில் அழகிய ஓவியங்கள் தீட்டப் பட்டுள்ளன. பாரோ மன்னர் களின் சிலைகளும் வைக்கப் பட்டுள்ளன.

மேலும், வாட்யே, தனது தாயார், மனைவி, பிற உறவினர் களுடன் காணப் படுகிற அலங்காரக் காட்சி களும் இடம் பெற்றுள்ளன. 

இந்த கல்லறையை தோண்டிப் பார்க்கும் பணியை புதை பொருள் ஆராய்ச் சியாளர்கள் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்கி உள்ளனர்.


இதில் அரச குரு வாட்யேயின் உடல் வைத்து அடக்கம் செய்யப் பட்ட பூ வேலை களைக் கொண்ட 

கல்லால் ஆன சவப்பெட்டி பற்றிய தகவல்கள், வாட்யேயின் எலும்புகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)