சர்கார் படம் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டல் !

0
சினிமாவில் மட்டுமே, மூன்று மணி நேரத்தில், சர்கார் அமைக்கலாம் நிஜத்தில் முடியாது என, நடிகர் விஜய்யின், சர்கார் படத்தை, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலடித்தார்.
சர்கார் படம் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டல் !
தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னை கோட்டூர் புரத்தில், 'மக்களோடு கொண்டாட்டம்' நிகழ்ச்சி, தமிழக பா.ஜ., சார்பில் நடந்தது. 

இதில், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 

பின், அவர் அளித்த பேட்டி: 

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக, சர்கார் படத்துக்கு, டிக்கெட் விற்கப் பட்டுள்ளது. மூன்று மணி நேரத்தில், ஒரு அரசாங்கம் எப்படி அமைக்கலாம் என, படம் எடுக்கப் பட்டுள்ளது. 

மூன்று மணி நேரத்தில், ஒருவர் முதல்வர் ஆகலாம், பிரதமர் ஆகலாம், ஏன், அரசாங்கத்தையே அமைக்கலாம். இது வெல்லாம், சினிமாவில் மட்டுமே நடக்கும். 
நிஜத்தில் நடக்காது என்பது, நடப்பவர் களுக்கும் தெரியும், நடிப்பவர் களுக்கும் தெரியும். ரசிகர்களை ஏமாற்றி விட்டு, கதை எழுதியவர்களை ஏமாற்றி விட்டு, அரசாங்கத்தை ஏமாற்றி விட்டு, 

அரசாங்கம் எப்படி அமைக்கலாம் என, படம் எடுத்திருக் கிறார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)