ரவுடி கொலை - இதயத்தை அறுத்து கொண்டு சென்ற பயங்கரம் !

0
இப்படி ஒரு கொலையை நாடே பார்த்ததில்லை... எவ்வளவு பயங்கரம்? ஈரக்குலையே நடுங்க மாதிரியா கொலை பண்ணுவாங்க?


கர்னூலை சேர்ந்த பிரபலமான ரவுடிதான் சென்னையா என்பவர். 

சாய்பாபா காலனியில் வசித்து வந்த சென்னையா வுக்கு உருப்படியான வேலை எதுவும் இல்லை.

விரோதிகள்

பிக்பாக்கெட் தொடங்கி வீடுகளில் புகுந்து ஆட்டைய போடுவது வரை எல்லா கோக்குமாக்கு வேலைகளி லும் ஈடுபட்டு வந்திருக்கிறார். 

அதனால் இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் பதிவாகி ஜெயிலுக்கு கூட போய் வந்திருக்கிறார். 

இப்படி குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் சென்னையா வுக்கு நிறைய விரோதிகளும் உருவானார்கள். 

தொழில் ரீதியான போட்டிகளும் வந்து போயின.

துங்கபத்ரா நதிக்கரை

இந்நிலையில், நேற்றிரவு துங்கபத்ரா நதி கரையில் சென்னையாவை யாரோ மர்மநபர்கள் கொலை செய்து விட்டு தப்பியுள்ளனர். 

இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கர்னூர் போலீசுக்கு தகவல் அளித்தனர். 

விரைந்து வந்து பார்த்த போலீசார் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.


இதயத்தை அறுத்தனர்

கொலை செய்த நபர்கள் சென்னையா வின் இதயத்தை அறுத்து கையோடு எடுத்து சென்றுள்ளனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். 

முதல் கட்டமாக, சென்னையாவை அவருடைய விரோதிகள் கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடும் அதிர்ச்சி

அதனால் பழைய ரவுடிகளின் பெயர் பட்டியல்களை வைத்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

ரவுடியை கொலை செய்து அவருடைய இதயத்தை அறுத்து எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை மட்டும் இல்லாமல் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)