கால்டாக்சியை கடத்திய கும்பல் கைது - ஒருவர் தப்பியோட்டம் !

0
திருவள்ளூரைச் சேர்ந்த சிவராஜ் சென்னையில் பிரபல கால்டாக்சி நிறுவனத்தில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். 


இவரது காரில், பெரம்பூர் ரயில் நிலையத்தி லிருந்து கொடுங்கை யூருக்கு மூவர் பயணித்துள்ளனர். 

தொடர்ந்து கார் கொடுங்கையூர் சென்ற போது, கத்தி முனையில் ஓட்டுநர் சிவராஜை மிரட்டி கீழே தள்ளி விட்டு காரை கடத்தி சென்றுள்ளனர்.

இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் அவ்வழியே வந்தவர்க ளுடன் துரத்தி சென்று, காரினை ஓட்டுனர் சிவராஜ் மடக்கி பிடித்துள்ளார். 

அப்போது ஒருவர் தப்பியோடியதை யடுத்து, இருவரை மட்டும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், அவர்கள் திருவல்லிக் கேணியை சேர்ந்த விக்ரம், அண்ணாநகரைச் சேர்ந்த கார்த்திக் என தெரிய வந்தது. 


இதில் விக்ரம் என்பவர், கொலை வழக்கில் தேடப்பட்டு வந்ததையும் உறுதி செய்து, 

இருவரையும் போலீசார் கைது செய்தனர். கார் கடத்தலில் தப்பியோடிய கோபி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)