தூத்துக்குடியில் இளம்பெண் அழுகிய நிலையில்.. அம்மா கோமா நிலையில் !





தூத்துக்குடியில் இளம்பெண் அழுகிய நிலையில்.. அம்மா கோமா நிலையில் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
தூத்துக்குடி யில் வீட்டில் இளம்பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடந்தார். அழுகிய நிலையில் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே முத்தையாபுரம், குமாரசாமி நகர், குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி.


இவரது மனைவி பத்திரகாளி என்ற பத்மாவதி. இந்த தம்பதியருக்கு கணேசன் என்ற மகனும், சபீதா என்ற மகளும் உள்ளனர்.

ராஜமணி கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இதனால் பத்மாவதி மனநிலை பாதிக்கப் பட்டிருந்தார். 

கணேசன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். சபீதா பிகாம் முடித்துள்ளார். 

இந்நிலையில, சபீதாவுக்கு கடந்த ஒரு வார காலமாக உடல் நிலை பாதிக்கப் பட்டிருந்தாராம்.

இதனை மனநிலை பாதிக்கப்பட்ட தாய் பத்மாவதி இதனை கவனிக்க வில்லையாம். 

இந்நிலையில், நேற்று காலை அவர்களது வீட்டில் துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் அளித்த 

தகவலின் பேரில் முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சபீதாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப் பட்டுள்ளது. இவர் இறந்து 4 நாட்கள் கடந்திருக்கும் எனத் தெரிகிறது.


அவர் மரணத்திற்கான காரணம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)