எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 வீரர்கள் உயுரிழப்பு !

0
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியில் 
நேற்று வழக்கம் போல இந்திய எல்லையோர பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பிற்பகல் சுமார் 2 மணியளவில் சுந்தர்பானி செக்டர் எல்லைக் கோட்டுப் பகுதி வழியாக 

பாகிஸ்தானில் இருந்து சில தீவிரவாதிகள் இந்தியாவு க்குள் ஊடுருவ முயற்சி செய்தனர். 


இதை பார்த்த இந்திய பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியவாறு முன்னேறி வந்தனர். 

இதில் இந்தியாவை சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர். 

பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்ப ட்டனர்.

தொடர்ந்து அங்கு இருதரப்பின ரிடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வரும் நிலையில், 

மேலும் ஒரு இந்திய வீரர் காயமடைந்த தாக முதல்கட்ட தகவல் வெளி வந்துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)