2 நாட்களில் பருவமழை தொடங்கும் - வானிலை மையம் !

0
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கு வதற்கு 


சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். 

அவர் கூறுகையில், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் வளி மண்டலத்தில் ஒரு சுழற்சி நிலவுகிறது. 

இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. 

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடைவெளி விட்டு அவ்வப்போது மழை பெய்யும். 


கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூர், கேளம்பாக்கம், மகாபலிபுரம், சென்னை தரமணி ஆகிய இடங்களில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி யுள்ளது. 

மழை தற்போது தான் பெய்யத் தொடங்கி யுள்ளது, படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும். 

தமிழகத்தின் உள்மாவட்டங் களிலும் இதே போன்று மழையின் அளவு படிப்படி யாக அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)