கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் எப்படி செயல்படுவது?





கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் எப்படி செயல்படுவது?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா சமீபத்தில் சோதனை செய்தது அதன் அண்டை நாடுகளையும், 
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் எப்படி செயல்படுவது?
அமெரிக்கா வையும் கவலை அடையச் செய்து ள்ளது. இந்த வகை ஏவுகணை களின் செயல்பாடு மற்ற சாதாரண ஏவுகணை களை விட முற்றிலும் வித்தியா சமானது. 

இது குறித்து வாஷிங்டனில் உள்ள ஆயுத கட்டுப்பாடு மற்றும் ஆயுத பரவல் தடை மைய த்தின் மூத்த அறிவியல் ஆலோசகர் பிலிப் காயில் கூறிய தாவது: 
‘ஹவாசாங்-15’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐசிபிஎம்) வட கொரியா கடந்த 28ம் தேதி சோதனை செய்தது. 

இது ஏவுதளத் திலிருந்து 1000 கிலோ மீட்டர் தூரம், வானில் நேராக பயணம் செய்து வடகொரியா வுக்கு சற்று தள்ளி கடலில் விழுந் துள்ளது. 

இந்த ஏவுகணை யில் சரியான வழிகாட்டி (நேவிகேஷன்) கருவிகள் பொருத்தப் பட்டிருந் தால், அது ஏவுதளத்தி லிருந்து 13 ஆயிரம் கி.மீ தூரம் வரை சென்றிருந் திருக்கும். 

சோதனை முயற்சி யாக ஏவப்பட் டுள்ளதால், அதில் வெடிபொருள் ஏதுவும் இல்லாமல் அனுப்பப் பட்டுள்ளது.
ஐசிபிஎம் ஏவுகணை கள் ஒரு கண்டத்தி லிருந்து இன்னொரு கண்டத்தி லிருக்கும் நாடுகளை தாக்குவதற் காக உருவாக்கப் படுகின்றன.

பெரும் பாலான ஐசிபிஎம் ஏவுகணை கள், செயற்கைக் கோள்களை எடுத்துச் செல்லும் ராக்கெட் தொழில் நுட்பத்தில் தான் தயாரிக்கப் படுகின்றன.
ஏவுதளத்தில் இருந்து ஐசிபிஎம் ஏவுகணை ஏவப்பட்ட வுடன், 2 முதல் 5 நிமிடங் களில் அது விண்வெளி க்கு சென்று விடும். இந்த ஏவுகணை யிலும் 3 கட்ட ராக்கெட் இன்ஜின்கள் பொருத்தப் படும். 

இவை திரவ மற்றும் திட எரிபொரு ளில் செயல்படு பவையாக இருக்கும். குறிப்பிட்ட தூரம் சென்றதும் ஒவ்வொன் றாக பிரிந்து விடும்.

விண்வெளி யில் ஐசிபிஎம் ஏவுகணை நுழைந் ததும், காற்றின் மூலம் ஏற்படும் தடை இருக்காது. 
இதனால் அதன் வேகம் மணிக்கு 24 ஆயிரம் கி.மீ முதல் 27,360 கி.மீ வேகம் வரை அதிகரி க்கும். 

மூன்றாவது கட்டத்தில் ஏவுகணை எந்த இலக்கை தாக்க வேண்டுமோ, அந்த இடம் நெருங்கி யதும் மீண்டும் பூமிக்குள் நுழையும். 
அப்போது ஏற்படும் ஊராய்வில் மிக அதிகளவி லான வெப்பத்தை தாங்கும் வகையில் அந்த ஏவுகணை யில் வெப்ப பாதுகாப்பு கவசம் இருக்க வேண்டும். 

இல்லை யென்றால் வானிலேயே அந்த ஏவுகணை எரிந்து விடும்.  3வது கட்டத்தை வெற்றிகர மாக கடந்த பின்பு தான் ஏவுகணை யில் உள்ள வெடி பொருளோ அல்லது அணு ஆயுதமோ இலக்கை தாக்கி அழிக்கும்.

வடகொரியா கடந்த ஜூலை 4ம் தேதி சோதித்த ஏவுகணை 37 நிமிடங்கள் பறந்தது.

ஜூலை 28ம் தேதி சோதித்த ஏவுகணை 47 நிமிடங்கள் பறந்தது. தற்போது சோதித்த ‘ஹவாசாங்-15’ ஏவுகணை 54 நிமிடங்கள் பறந்து ள்ளது. 

சர்வதேச விண்வெளி மையம் (ஐஎஸ்எஸ்) இருக்கும் தூரத்தை விட 10 மடங்கு அதிக உயரம் பறந் துள்ளது. 
அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா விடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கள் உள்ளன. 

ஆனால் எந்த ஏவுகணை களும் மற்ற நாடுகளை தாக்குவதற் காக இதுவரை பயன் படுத்தப்பட வில்லை. 
சோதித்து மட்டுமே பார்த்துள்ளன. அதே போல் தான் வடகொரியா வும் சோதனை செய்துள்ளது. 

அணு ஆயுதத் துடன் ஐசிபிஎம் ஏவுகணை களை போரில் பயன்படுத்தி னால் மனித குலத்துக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)