கேஜி தனியார் மருத்துவமனையில் பிணமாக வைத்து நாடகம் - அதிர்ச்சி சம்பவம் !

0
இறந்து மூன்று நாட்கள் ஆன உடலுக்கு தஞ்சையில் தனியார் மருத்துவமனை சிகிச்சை வழங்கியதை அம்பலப் படுத்திய தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவர்.
நாகை மாவட்டம் கிளியனூர் ஈசனுர் பகுதியைச் சேர்ந்த சேகர் வயது 55 இவருக்கு ஒரு மகன் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 

அரசு போக்குவரத்து துறையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார் இவர் கடந்த தினங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

கடந்த 7ம் தேதி நாகப்பட்டினம் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு அறுவை சிகிச்சை நடை பெற்றது. 

நிலையில் சிகிச்சை பெற்று வந்த சேகரை நாகப்பட்டினம் தனியார் மருத்துவ மனை தஞ்சாவூர் கேஜி மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது .

அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்டு அதன் பேரில் கேஜி மருத்துவ மனைக்கு சேகரை குடும்பத்தினர் 11ஆம் தேதி அழைத்து வந்துள்ளனர்.

அங்கு தொடர் சிகிச்சை நடைபெற்று வந்தது ஆனால் உறவினர்கள் யாரையும் சேகர் பார்க்க அனுமதிக்க மறுத்தனர் மருத்துவ மனை நிர்வாகத்தினர். 


ஆனால் தொடர்ந்து ஐந்து லட்சம் வரை மருத்துவமனை நிர்வாகத்தினர் பெற்று வந்துள்ளனர்.

உற்றார் உறவினர்கள் சேகரை அங்கிருந்து. மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் 

அங்கு பரிசோதித்த அரசு மருத்துவமனை மருத்துவர் சேகர் கடந்த 3 நாட்களுக்கு முன்பே இறந்து விட்டதாக கூறி யுள்ளார்.

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் சேகர் மகன் சுபாஷ் புகார் மனு கொடுத்துள்ளார் 

இதனை தொடர்ந்து காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)