அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு !

0
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப தாவது:- 
மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு மக்களுக் காகவே திட்டங்களைத் தீட்டி செயல் படுத்தியவர் ஜெய லலிதா. 

மக்களுக்காக வகுக்கப்படும் திட்டங்களை சரிவர நடைமுறைப் படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அரசு அலுவலர்கள் 

மற்றும் ஆசிரியர்கள் என்பதால் அவர் களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கியவர் ஜெய லலிதா.


அவர் வகுத்த பாதையில் செயல்படும் இந்த அரசு, 7-வது மத்திய ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு எடுத்த முடிவுகளை ஆராய்ந்து, 

மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக் கான திருத்திய ஊதிய விகிதங்கள், படிகள், ஓய்வூதியம் 

மற்றும் ஓய்வுக்கால பலன்கள் ஆகியவற்றை உயர்த்தி வழங்க அமைக்கப்பட்ட அலுவலர் குழு, 

2017-ன் பரிந்துரைகள் அரசால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, 1-10-2017 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

தற்பொழுது 1-1-2016 முதல் திருத்திய ஊதியம் பெறும் மத்திய அரசு அலுவலர் களுக்கு 1-7-2018 முதல் கூடுதல் தவணையாக 

அகவிலைப்படி இரண்டு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப் பட்டதன் அடிப் படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், 

ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதிய தாரர்களுக்கு அகவிலைப் படியை 1-7-2018 முதல் 

கூடுதல் தவணையாக 2 சதவீதம் அளித்து, தற்பொழுதுள்ள 7 சதவீதத்தி லிருந்து 9 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர் களுக்கும், 

ஆசிரியர் அல்லாத பிற அலுவலர் களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர் களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு, 

அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர் களுக்கும், 

அரசு மற்றும் உதவி பெறும் பல்தொழில் நுட்பப்பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் 

பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோரு க்கும் வழங்கப்படும். 

இந்த அகவிலைப்படி உயர்வினால், அரசு ஊழியர்களு க்கு ரூ.314 முதல் ரூ.4,500 வரையில் ஊதிய உயர்வும், 

ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதிய தாரர்களுக்கு ரூ.157 முதல் ரூ.2,250 வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.

சிறப்பு ஊதிய அட்டவணை யில் ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த் துறையிலுள்ள கிராம உதவியாளர் களுக்கும், 

சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், 

சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சிச் செயலாளர் கள், 

எழுத்தர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் போன்றவர் களுக்கும் பொருந்தும்.


இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி ஜூலை, 2018 முதல் ஆகஸ்டு, 2018 வரையிலான காலத்திற்கு 

நிலுவை யாகவும், செப்டம்பர் 2018 (இந்த மாதம்) முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும். 

இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயனடைவர். 

அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்று க்கு தோராயமாக ரூ.1,157 கோடியாக இருக்கும். 

இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)