நண்பனுடன் சேர்ந்து வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய கணவன் கைது !





நண்பனுடன் சேர்ந்து வைத்து வீடியோ எடுத்து மிரட்டிய கணவன் கைது !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல் நகரை சேர்ந்தவர் ராகேஷ் (29). இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். 
இந்நிலையில் சம்பவத்தன்று, உன்னுடன் பேச வேண்டும் எனக்கூறி தனது மனைவியை வீட்டுக்கு அழைத்துள்ளார். 

அங்கு தனது மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த அவர், குளிர் பானத்தில் மயக்க மருந்தினை கலந்து கொடுத்துள்ளார். 

அதன் பிறகு, மனைவி பாதி சுய நினைவில் இருந்த போது தனது நண்பனுடன் சேர்ந்து மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவை வைத்து மனைவியை மிரட்ட ஆரம்பித்துள்ளார். 


இதனை வெளியில் கூறினால், நீ ஒழுக்கங் கெட்டவள், வேறு ஒருவருடன் இருந்துள்ளாய் எனக்கூறி, சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி யுள்ளார். 

இதனால் வேதனை யடைந்த மனைவி வீட்டில் துவண்டு போயுள்ளார். 

இந்நிலையில் இப்பெண்ணின் சகோதரி அளித்த நம்பிக்கையின் பேரில் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். 

பாலியல் வன்புணர்வு சட்டத்தின்படி கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)