சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை நிவாரணமாக வழங்கிய சிறுமி !

0
டவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவை வரலாறு காணாத மழை புரட்டிப் போட்டிருக் கிறது. 
எங்கும் மரண ஓலம். கேரளாவுக்கு பணம், உணவு பொருள்கள், உடைகள் என்று இந்தியாவே வாரி வழங்கிக் கொண்டிருக் கிறது. 

இந்நிலையில், தனது இதய ஆபரேஷனுக் காக சமூக வலை தளங்கள் மூலம் திரட்டிய பணத்தில் 5000-த்தை 

கேரள வெள்ள நிவாரணத்திற்கு வழங்கி நெகிழச் செய்திருக்கிறார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அட்சயா என்ற சிறுமி.

கரூர் மாவட்டம், தான் தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது குமரபாளையம். 

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் - ஜோதிமணி தம்பதியின் மகள் தான் அட்சயா. ஏழாவது படிக்கிறார். 

பிறவியிலேயே இதயத்தில் பிரச்னையோடு இருந்த அட்சயாவு க்கு, ஆபரேஷன் பண்ண வழியில்லாமல் அவரது பெற்றோர் அல்லாடியிருக் கிறார்கள். 


கடந்த வருடம் இவரது நிலைமை சீரியஸாக, உடனே ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமை. 

கையை பிசைந்து நின்ற அட்சயாவின் பெற்றோருக்கு கரூரைச் சேர்ந்த  'இணைந்த கைகள்' என்ற அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் சாதிக் அலி உதவியிருக்கிறார்.

சமூக வலைத் தளங்கள் மூலம் நிதி திரட்டி அட்சயாவுக்கு மூன்றரை லட்சம் வரை செலவு செய்து சென்னையில் ஆபரேஷன் செய்ய வைத்திருக்கிறார். 

'மறுபடியும் ஒரு வருடத்திற்குள் இன்னொரு ஆபரேஷன் செய்யனும்' என்று டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள். 

வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அந்த ஆபரேஷனுக்கு தேவை இரண்டரை லட்சம். 'இணைந்த கைகள்' அமைப்பின் சாதிக் அலி அட்சயாவின் 

ஆபரேஷனுக் காக சமூக வலை தளங்கள் மூலம் மீண்டும் நிதி திரட்டத் தொடங்கி இருக்கிறார். இதுவரை 20,000 வரை கிடைத்திருக் கிறது. 

கேரள வெள்ளப் பாதிப்பையும், அங்கு மக்கள் பரிதவிப்பதை யும் பார்த்து இதயம் கசிந்த அட்சயா, 

தனக்கு ஆபரேஷன் செய்வதற் காகக் கிடைத்த நன்கொடைப் பணமான 20,000 ரூபாயில் 5000-த்தை கேரள வெள்ள நிவாரணத் திற்கு வழங்கி நெகிழச் செய்திருக்கிறார். 

மக்கள் பாதை என்ற அமைப்பு மூலம் இந்தத் தொகை கேரளாவிற்கு அனுப்பப்பட இருக்கிறது. 

அந்த அமைப்பின் கரூர் நகரப் பொறுப்பாளர் ஜெய்சுந்தரிடம் ரூ.5000-த்தை வழங்கி இருக்கிறார் அட்சயா.


இது குறித்து அட்சயாவிடம் பேசினோம். "எனக்கும் இப்படி பலர் உதவித்தான், நான் இன்னைக்கு உயிரோடு இருக்கேன். 

மறுபடியும் எனக்கு ஆபரேஷன் பண்ணவும், பலர் பணம் அனுப்புறாங்க. 

கேரளாவில் வெள்ளத்தை யும், அங்கே என்னைபோல எத்தனையோ சிறுமிகள் தவிப்பதையும் டி.வியில் பார்த்தேன். 

மனசு தாங்கலை. அதனால் தான், எனக்கு ஆபரேஷன் செய்ய வச்சுருந்த பணத்தில் கொஞ்சத்தை எடுத்து, 

அவங்களுக்கு கொடுத்திருக்கேன்" என்று கூறி நம்மையும் கண்கலங்க வைத்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)