அணைப் பாதுகாப்புச் சட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றப் பட்டது குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி யுள்ளார்.
2010ஆம் ஆண்டு வரைவு அணைப் பாதுகாப்பு மசோதா வுக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று 2010ஆம் ஆண்டை வரைவு அணைப் பாதுகாப்பு மசோதா கைவிடப் பட்டது.
இந்நிலையில் சட்டப் பேரவையில் இன்று அணைப் பாதுகாப்புச் சட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனி தீர்மான த்தை கொண்டு வந்தார்.
இந்த மசோதாவை மாநிலங் களை கலந்து ஆலோசித்த பின்னரே இயற்ற வேண்டும் என்று கூறி தீர்மானத்தை முன் மொழிந்தார்.
இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறை வேற்றப் பட்டது. மேலும், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் இந்தத் தீர்மானம் பற்றி தெரிவித் துள்ளார்.
அதில், மாநிலங்களுக் கிடையில் அணைப் பாதுகாப்பு மசோதா பற்றி ஒத்த கருத்து ஏற்படும் வரை அந்த வரைவு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.
Thanks for Your Comments