துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் !





துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியான வர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் !
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

அப்போது, நடந்த கலவரத்தை அடக்குவதற் காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பொது மக்கள் இது வரை 11 பேர் உயிரிழந் துள்ளனர். இந்தச் சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 

ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையில், துப்பாக்கிச் சூடு நடை பெற்றதாக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப் பட்டது.

இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர் களின் குடும்பங் களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவி த்துள்ளது. 
மேலும், படுகாய மடைந்தவர் களுக்கு ரூ.3 லட்சமும் லேசான காயம் அடைந்தவர் களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப் படுகிறது. 

மேலும், உயிரிழந் தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்றவாறு அரசு வேலை வழங்கப்படும். சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும். எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)