வக்ஃபு நிர்வாகம் உடையுமா? | Will Wakfu Admin?

0
இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் சொத்துக் களைப் பராமரிக்க வும், 


அதன் மீது சட்டப் பூர்வமான நடவடிக் கைகளை மேற்கொள்ள வும் சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்பு களாக 

மத்திய வக்ஃபு வாரியமும் மாநில வக்ஃபு வாரியங் களும் செயல் பட்டு வருகின்றன. 

அவை நேர்மை யாகவும் அரசியல் நெருக்கடி களுக்கு ஆளாகா மலும் செயல்படும் போது தான், 

அவற்றின் முழுமை யான நோக்கம் நிறைவேறும். ஆனால், காலப் போக்கில் கட்சி அரசியல் இதன் உள்ளேயும் புகுந்து விட்டது.

சிறு பான்மையின மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற் காக அமைக்கப் பட்ட சச்சார் கமிட்டி (2008), 

பள்ளிவாசல் களுக்கு இனாமாக வழங்கப் பட்ட சொத்துக் களின் நிலை குறித்தும் ஆராய்ந்தது. 

பெரு நகரங்களின் வணிகப் பகுதியில் இருக்கும் வக்ஃபு வாரியத்து க்குச் சொந்த மான இடங்களில் 

பெரும் பாலானவை, மாநகராட்சி யில் அங்கம் வகிப்பவர் களின் ஆளுகை யில் இருப்பது தெரிய வந்தது. 

அச்சொத்துக் களை ஆக்கிர மிப்புகளி லிருந்து மீட்க வேண்டும் என்றும் அதற்காக சக்தி வாய்ந்த 

சட்ட அதிகாரம் படைத்த செயல் பாடுகள் அவசியம் என்றும் கமிட்டி வலியு றுத்தியது. 

இந்தச் சொத்துக்கள் மீட்கப்பட்டால், கல்வி நிறுவனங்கள், சுகாதார மையங்கள், சமுதாய நல மையங்கள் போன்ற வற்றை ஏற்படுத்தி, 

சமூக நலனுக் கான திட்டங் களைச் செயல்படுத்த முடியும் என்றும், சச்சார் கமிட்டி கூறியது.

தமிழக த்தைப் பொறுத்த வரையில், பள்ளி வாசல்கள், கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், அடக்க ஸ்தானங்கள் என 

11 ஆயிரம் அறக்கட்டளை களை நிர்வகிக்கும் பொறுப்பு, வக்ஃபு வாரியத் துக்கு இருக்கிறது. 

வாரியம் தனது சொத்துக் களை முறைப் படுத்திக் கொள்ள முடிந்தால், அதிலிருந்து கிடைக்கும் 

கோடிக்கணக் கான ரூபாயில் ஒரு பகுதியைக் கொண்டு, தன்னுடைய நிர்வாக த்தை, தானே நடத்திக் கொள்ளலாம். 

ஆனால், அதைச் செய்யாமல், நிர்வாகச் செலவுகளுக் காக அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்தி ருக்கிறது. 

அரசிடமிருந்து குறைந்த அளவே மானியத் தொகை பெறுவதால், வாரியத்தில் பணியாற்றும் ஊழியர் களுக்கு முறையாகச் சம்பளம் கொடுக்க முடியாத நிலை. 

இந்த நிலை மாறினால் தான், வக்ஃபு வாரியம் தன்னிச்சை யாக செயல்பட்டு, சிறப்பான நிர்வாக த்தைத் தரமுடியும்.

உறுப்பினருக் கான தகுதிகள்

ஒவ்வொரு மாநிலத் திலும் இருக்கும் வக்ஃபு வாரியத்தின் நிர்வாக த்தைத் திறம்பட அமைத்து, 

அது சிறப்பாக நடைபெற உதவ வேண்டிய பொறுப்பு, அந்தந்த மாநில நிர்வாக த்துக்குத் தான் உள்ளது. 

இந்த நிர்வாகப் பொறுப்பு களில் முஸ்லிம் எம்.எல்.ஏ., அல்லது எம்.பி.க்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். 

சட்டம் பயின்று நிபுணத்துவம் பெற்ற பார் கவுன்சில் உறுப்பி னர்கள் அல்லது மூத்த வழக்கறிஞர் களை 

நிர்வாகப் பொறுப்பில் இடம் பெற வைக்க வேண்டும் என்பதெல் லாம், வக்பு வாரிய சட்ட   திட்டங்களில் கூறப்பட்டி ருக்கிறது. 

வக்ஃபு வாரியத்துக்கு முஸ்லிம் அறங்காவ லர்களாக (முத்தவல்லிகள்) இருப்ப வர்கள் இருவரைத் தேர்தல் மூலமாக தேர்வு செய்யவும் வழிவகை செய்யப் பட்டிருக் கிறது. 

அதே போல, மாநில அரசு சார்பிலும் ஒருவர் வக்ஃபு வாரிய த்தில் உறுப்பி னராக இருக்க வேண்டும் என்பதால், 

இணைச் செயலர் அந்தஸ்துக்கு கீழ் நிலையில் இல்லாத ஒரு அரசு அதிகாரியை நியமி க்கவும், வக்ஃபு வாரிய சட்டம் தெளிவாகச் சுட்டிக் காட்டி இருக்கிறது.

மேலும், நகரமைப்புத் திட்டம் அல்லது வணிக மேலாண்மை சமூகப் பணி அல்லது வருவாய் வேளாண்மை 

மற்றும் வளர்ச்சி செயல் பாடுகளில் அனுபவ முள்ள ஒரு நபர், வக்ஃபு வாரியத்து க்குத் தேர்ந்தெடுக் கப்பட வேண்டும். 

கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் குறிப்பிட்ட அளவில் சாதனை படைத்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரும் 

வக்ஃபு வாரிய த்துக்கு உறுப்பி னராகத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் விதிகள் சொல்கின்றன. 

உறுப்பினர் களைத் தேர்வு செய்யும் போது, அதில் பெண்களும் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டிருக் கிறது.

வாரியத்துக்கு உறுப்பினர் களாக அரசுத் தரப்பில் நியமிக்கப் படும் இருவரில் ஒருவர் தேர்ந்த கல்வி யாளராகவும், மற்றொருவர் மத அறிஞராக வும் (உலமா) இருக்க வேண்டும். 

அவர்களு க்கும் அரசியலு க்கும் எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது. ஆனால், ஆண்டாண்டு காலமாக, வக்ஃபு வாரிய நிர்வாகத்தில், 

இஸ்லாமிய சமுதாயத்தை மேம் படுத்தும் உலமாக்கள் இடம் பெறவே இல்லை. 

அரசியல் பின் புலத்துடனேயே, உறுப்பினர் களும், தலைவரும் தேர்வு செய்யப் பட்டு வருகிறார்கள். 

தேர்தலில் சில அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்க த்தைச் சேர்ந்தவர் களுக்கு உறுப்பினர் பொறுப்பு மற்றும் தலைவர் பொறுப்புகள் அளிக்கப் படுகின்றன. 

இதன் விளைவாக, வக்ஃபு வாரியம் தன்னிச்சை யான அமைப்பாகச் செயல் படுவதி லிருந்து மாறி, அரசு கையில் இருக்கும் ஒரு சாதாரணத் துறை போல ஆகி விட்டது.

ஆளுங் கட்சிகளின் ஆதரவு

மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான அப்துல் லத்தீப், தமிழக வக்ஃபு வாரியத்து க்கு இரு முறை தலைவராக இருந்து செயல் பட்டுள்ளார். 

திமுக ஆதரவோடு செயல் பட்டதாலேயே லத்தீப்புக்கு அந்தப் பொறுப்பு வழங்கப் பட்டது. 

1999-ல், திமுக - பாஜகவோடு கைகோர்த்த தால், வக்ஃபு வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் லத்தீப். 

2007-ல் வாரியத் தலைவராக வந்த த.மு.மு.க. வின் செ.ஹைதர் அலி, 2009-ல் அரசியல் நிலைப்பாடு மாறியதும், தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 

ஜெயலலிதா வின் தோழி பதர் சயீத், 2002-ல் வக்ஃபு வாரியத் தலைவ ரானதும் கூட ஆளுங் கட்சியின் செல்வாக் கால் தான். 

தற்போது கிட்ட தட்ட இரண்டரை ஆண்டு காலமாக, தலைவர் தேர்வு செய்யப்பட வில்லை. 

தலைவரைத் தேர்வு செய்வதற் கான தேதி அறிவிக்கப் பட்டு ஒத்தி வைக்கப் பட்டு வருகிறது. 

யாரைத் தேர்வு செய்வது என்பதில் ஆளுங்கட்சி க்குள் இருக்கும் கருத்து மாறு பாடுகள் தான் தலைவர் தேர்தலு க்கான தாமதத்து க்குக் காரணம் என்று கூறப்படு கிறது.

வக்ஃபு வாரியம் ஏற்படுத்தப் பட்டதன் நோக்கமே, அதன் சொத்துக் களின் பலன்கள், ஏழை மக்களு க்குப் பயன்பட வேண்டும் என்பது தான். 

ஆனால், வக்ஃபு வாரிய நிர்வாகத் துக்குள் அரசியல் புகுவதால், வாரியத் தின் அடிப்படை நோக்கமே அடிபட்டுப் போகிறது. 

இந்த நிலை மாற வேண்டும். புதிதாகத் தேர்வாகும் தலைவர், வக்ஃபு வாரிய சொத்துக்கள் அனைத்தை யும் 

நியாய மாகக் கணக்கிட்டு, அதில் எதையும் மறைக் காமல் பொது வெளியில் வைக்க வேண்டும். 

அரசியல் கட்சிகளின் கட்டுப் பாட்டிலிருந்து, வாரிய நிர்வாக த்தை முழுமை யாக மீட்டெடுத்து, தன்னிச்சை யாகச் செயல்பட வைக்க வேண்டும். 

நிர்வாகச் செலவுகளுக் காக, அரசிடம் மானியம் கேட்டு கையேந்து வதைத் தவிர்த்து, தங்களிடம் உள்ள 

சொத்துக்கள் மூலம் வருமான த்தை ஏற்படுத்தி, தன்னிறைவு பெற்று, தன்னிச்சை யாகச் செயல்பட முயற்சிக்க வேண்டும்.

“வக்ஃபு வாரிய உறுப்பினர் பொறுப்பு என்பது, தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளு க்கு உதவி யாக இருப்பவர் களுக்குக் கொடுக்கப் படுகின்ற பொறுப்பு அல்ல. 

இந்தப் பொறுப்புக்கு வருகிற வர்கள், வக்ஃபு வாரியத்தின் பணிகளுக் காகப் பயணப் படிகூட பெறக் கூடாது. 

இறை பக்தியில் சிறந்தவர் களாக இருக்க வேண்டும். நேர்மை யுடன் இருந்து வக்ஃபு வாரியப் பணியைச் செய்ய வேண்டும்’’ என, 

தன்னுடைய கருத்தைப் பல்வேறு இடங்களில் வெளிப் படுத்தி யிருக்கிறார் காயிதே மில்லத். 

அவரது வார்த்தைகள் வக்ஃபு வாரியத் தலைவர் களுக்கு வழிகாட்டும் நெறிமுறை களாக அமையட்டும்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)