பெண்ணை வீட்டில் சிறை வைத்த நடிகையின் மகன் கைது !

பல சர்ச்சை களில் சிக்கி யுள்ள நடிகை புவனேஸ்வரி யின் மகன் மிதுன் சீனிவாசனை போலீசார் கைது செய்துள்ளனர். 
பெண்ணை வீட்டில் சிறை வைத்த நடிகையின் மகன் கைது !
பேஸ் புக்கில் பழகிய பெண்ணை, வீட்டுக்கு வர வழைத்து கட்டாயப் படுத்தி, மிரட்டி அடைத்து வைத்த தாக அவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை புவனேஸ்வரி, பல சர்ச்சை களில் ஏற்கனவே சிக்கி யுள்ளார். 

பேஸ்புக்கில் பழகிய பெண்ணை வீட்டில் அடைத்து வைத்ததாக தற்போது அவருடைய மகன் மிதுன் சீனிவாசன் கைது செய்யப் பட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் கூறிய தாவது: சென்னை சாலி கிராமத்தைச் சேர்ந்த, 32 வயதாகும் உதயா என்ற பெண், விவாகரத்து பெற்று, 10 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர் பேஸ்புக்கில் மிதுன் சீனிசனுடன் பழகி உள்ளார்.

உதயாவை திருமணம் செய்ய விரும்பு வதாக மிதுன் கூறியுள்ளார். இதனி டையே மிதுன் போதைப் பழக்கம் உள்ளவர் என்பது தெரிய வந்த தால் திருமணம் செய்யும் முடிவை உதயா மாற்றிக் கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திர மடைந்த மிதுன் அவரை மிரட்டியுள்ளார். இருவரு க்கும் இடையே இது தொடர் பாக பிரச்னை இருந்து வந்துள்ளது. 

இதனிடை யில், உதயாவை தன்னுடைய வீட்டுக்கு வரும்படி மிதுன் அழைத் துள்ளார். அதன்படி மகனுடன் உதயா சென்றுள்ளார். அப்போது இருவரு க்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட் டுள்ளது. 

உதயா மற்றும் அவருடைய மகனை, வீட்டின் ஒரு அறை யில் மிதுன் அடைத்து வைத்து ள்ளார். போதை யில் அவர் தூங்கிய போது, நடிகை புவனேஸ்வரி, அறைக் கதவை திறந்து விட்டு, உதயாவை அனுப்பி வைத்து ள்ளார். 

உதயா கொடுத்த புகாரின் அடிப்படை யில் மிதுன் கைது செய்யப் பட்டு, நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறி யுள்ளனர். ஏற்கனவே பல சர்ச்சை களில் சிக்கி யுள்ள நடிகை புவனேஸ்வரி க்கு, தற்போது இது மிகப் பெரிய பிரச்னை யாக மாறி யுள்ளது.
Tags: