நிர்மலா தேவி செய்த மூளைச் சலவை? அதிர்ச்சித் தகவல் !

பேராசிரியை நிர்மலா தேவி, எப்படி யெல்லாம் மூளைச் சலவை செய்வார் என்பதை, விரிவாக விசாரணைக் குழுவினரிடம் சிலர் தெரிவித்துள்ளனர்.
நிர்மலா தேவி செய்த மூளைச் சலவை? அதிர்ச்சித் தகவல் !
அருப்புக் கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி யின் பேராசிரியை நிர்மலா தேவி மீது நான்கு மாணவிகள், கல்லூரி நிர்வாகத் திடம் பகிரங்கக் குற்றச் சாட்டை வைத்தனர். 

அது தொடர்பாக, எழுத்து பூர்வமாக புகாரும் கொடுத்தனர். அதன் பேரில், நிர்மலா தேவி சஸ்பெண்ட் செய்யப் பட்டார். 

இதற்கிடை யில், மாணவி களுடன் நிர்மலா தேவி பேசும் செல்போன் உரையாடல், பெரும் அதிர் வலையை ஏற்படுத்தியது. 

நிர்மலா தேவி பணியாற்றும் கல்லூரி யில் தொடங்கி, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், ஆளுநர் அலுவலகம் வரை இந்த சர்ச்சை வட்ட மடிக்கிறது.

தொடர்ந்து, கல்லூரியின் செயலாளர் ராமசாமி கொடுத்த புகாரின் பேரில், நிர்மலா தேவியை அருப்புக் கோட்டை நகர போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இந்த நிலையில், அருப்புக் கோட்டை போலீஸாரிட மிருந்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸாரு க்கு மாற்றி உத்தர விடப்பட்டது. இதனால், வழக்கின் விசாரணை தீவிர மடைந்தது. 
தற்போது, நிர்மலா தேவியை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரிக்க ஐந்து நாள்கள் அனுமதி யளித்து, நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இதற்கிடையில், நிர்மலா தேவி விவகாரத்தை விசாரிக்க, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விசாரணை அதிகாரியாக நியமித்தார். 

அவரும், மதுரைக்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறார். ஒரே நேரத்தில் இரண்டு விசாரணையை நிர்மலா தேவி வழக்கில் தொடர்புடை யவர்கள் சந்தித்து வருகின்றனர். 

மதுரை பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா, பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவிகள் ஆகியோரிடம் சந்தானம் தலைமை யிலான குழு விசாரிக்கத் திட்டமிட்டது. 

துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர் களிடம் நேற்று விசாரணை நடந்தது.

விசாரணைக் குழுவைச் சேர்ந்த கமலி, தியாகேஸ்வரி உள்ளிட்ட சிலர், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு மனம் விட்டுப் பேசுமாறு விசாரணைக் குழுவைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். விசாரணை யின் போது, நிர்மலா தேவி குறித்து வந்த தகவல்கள் எப்படி இருந்தது என்று விசாரித்தோம்.
நிர்மலா தேவி, கல்லூரியில் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவார். குறிப்பாக மாணவி களிடம் உரிமையோடு பேசுவார். அப்போது, மாணவி களின் குடும்பப் பின்னணி குறித்தும் விசாரிப்பார். 

அதன் பிறகு, அதில் சில மாணவி களின் செல்போன் நம்பர்களை வாங்கிப் பேசுவார். வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ். மூலம் 'குட் மார்னிங், குட் நைட்' என்று மெஸேஜ் அனுப்புவார் என்று தெரிவித் துள்ளனர். 

தொடர்ந்து, பழகுபவர் களின் முழு பயோ டேட்டாவை யும் தெரிந்து கொள்வார். பழகிய சில நாள்க ளிலேயே தன் குடும்பத்தில் ஒருவர் போல நடத்துவார். அதனால், அவரை எளிதில் நம்பிப் பழகி விடுவார் களாம்.

தினமும் மெஸேஜ் அனுப்புவார். பதில் அனுப்பாதவர் களிடம் உரிமை யாகப் பேசி பதில் அனுப்பச் சொல்வார். அவர்களுடைய எதிர் காலத்தில் அக்கறை கொண்டவர் போல அட்வைஸ் செய்வார். 

இப்படி சிலவார பழக்கத்துக்குப் பிறகு, வாட்ஸ்அப், சாட்டிங் என வேறு ரூட்டில் உரையாடல் பயணிக்கும். 

அதற்கு எதிர்த்தரப் பிலிருந்து வரும் ரியாக்‌ஷனைப் பொறுத்து, நிர்மலா தேவி தன் பேச்சு வார்த்தைத் தொனியை அமைத்துக் கொள்வாராம்.
கல்லூரி வளாகத்துக்குள், நிர்மலா தேவியைத் தெரியாத வர்கள் யாருமே இல்லை என்ற அளவுக்கு தகவல்கள் கிடைத்திருக் கின்றன. 

மேடம், அந்த அளவுக்கு கல்லூரி யில் பிரபலம். எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். எப்போதுமே, ’கண்ணுங்களா’ என்று தான் மாணவிகளை அழைப்பாராம். 

இவை, மேலோட்ட விசாரணை யிலேயே வெளிவந்த தகவல்கள். இன்னும் நெருக்கி விசாரிக்கும் போது, மேலும் பல உண்மைகள் தெரிய வரும்" என்கிறார்கள் விசாரணையின் போக்கைக் கவனிக்கும் சிலர்!
Tags: