வாய்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நடிகர்... ஸ்ரீலீக்ஸ் !

0
நடிகர் - நடிகைகளின் ஆபாச புகைப் படங்கள் மற்றும் வீடியோக்க ளால் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்திய சுசிலீக்ஸ் பாணியில் தெலுங்கில் 
வாய்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நடிகர்... ஸ்ரீலீக்ஸ் !
நடிகை ஸ்ரீரெட்டி சமூக வலைத் தளத்தில் உருவாக்கி இருக்கும் ஸ்ரீலீக்ஸ் நடிகர்கள், இயக்குனர் களின் அந்தரங்க விஷயங் களை அம்பலப் படுத்தி தெலுங்கு பட உலகை அதிர வைத்து வருகிறது.

இதில் தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலு பெயர் வெளியானது. இவர் தமிழில் நயன்தாரா நடித்த ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும், தெலுங்கில் அனாமிகா பெயரிலும் வெளியான படத்தை டைரக்டு செய்தவர்.

கொம்முலு வச்சின சேகருடு இயக்குனர் பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைக் கிறார். நடிகை களிடம் வாக்குறுதி அளித்து ஏமாற்றுகிறார் என்று சேகர் கம்முலுவை பற்றி ஸ்ரீரெட்டி குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு சேகர் கம்முலு மறுப்பு தெரிவித்த துடன் ஸ்ரீரெட்டி மீது வழக்கு தொடரப் போவதாக எச்சரித்தார். 

அதற்கு பதிலடியாக ஸ்ரீரெட்டி சட்ட நடவடிக் கையை சந்திக்க தயார் அவரைப் பற்றிய ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் புதிதாக இன்னொரு தெலுங்கு நடிகர் பற்றியும் பேஸ்புக் பக்கத்தில் பாலியல் புகார் கூறி யுள்ளார்.
அந்த நடிகர் சினிமாவிலும், நிஜ வாழ்க்கையிலும் இயல்பாக நடிக்க தெரிந்தவர். யாரையும் உணர்வுப் பூர்வமாக அணுகி சிக்க வைப்பார். மக்கள் முன் நாடகமாட தெரிந்தவர். 

மற்ற கதா நாயகர்கள் மகேஷ்பாபு, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரிடம் இருந்து நீங்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். தவறான நடத்தைகள் உள்ளவர். 

பல பெண்களை படுக்கையில் பயன்படுத்தி உள்ளார். ஒரு நாள் நிச்சயம் கடவுள் அவரை தண்டிப்பார். இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறி யுள்ளார்.

எந்த நடிகரை அவர் குற்றம் சாட்டி உள்ளார் என்று தெலுங்கு பட உலகில் பரபரப்பாக விவாதிக்கப் பட்டு வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)