நீரிழிவு ஏற்படுத்தும் பார்வை இழப்பை தடுப்பது எப்படி?

0
நீரிழிவு நோயால் நமது கண் பார்வை எந்த அளவுக்கு கடுமை யாகப் பாதிக்கப் படும், இதனால் ஏற்படும் பார்வை குறை பாட்டை குண மாக்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு ஏற்படுத்தும் பார்வை இழப்பை தடுப்பது எப்படி?
என்கிறார் சென்னை தி.நகர் இந்தி பிரசார சபா தெருவில் உள்ள ராதாத்திரி நேத்ராலயா கண் மருத்துவ மனையின் இயக்குனர் மற்றும் விழித்திரை நிபுணர் டாக்டர் வசுமதி வேதாந்தம். 

இவர் இதுவரை 1000-க் கும் மேற்பட்ட விழித்திரை அறுவை சிகிச்சை செய்துள்ளார். 

அவர் நீரிழிவால் ஏற்படும் கண் பார்வை குறைபாடு பற்றி கூறிய தாவது:-

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு நோய் மிக வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் எடுக்கப் பட்ட ஆய்வுப் படி உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. 

இந்தியாவைப் பொறுத்த வரை நகர்ப்புற நீரிழிவு நோயா ளிகளில் 2 சதவீதம் பேருக்கு விழித்திரை பாதிப்பு இருக்கும். சென்னையை பொறுத்த வரையில் 100 நீரிழிவு நோயாளிகளில் 5 பேருக்கு கண் பார்வை குறைபாடு இருக்கிறது. 

உலகிலேயே அளவுக்கு அதிகமான நீரிழிவு நோயாளிகள் இருப்பது இந்தியாவில் தான். இதனால் தான் இந்தியாவை நீரிழிவு நோயாளி களின் தலை நகரம் என்று வர்ணிக் கிறார்கள். 

நீரிழிவு நோயை டைப்-1, டைப்-2 என்று 2 வகையான பிரித்து ள்ளனர்.

30 வயதுக்குள் நீரிழிவு நோய் வருவதை டைப்-1 என்றும், 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் வருவதை டைப்-2 என்றும் பிரித்துள்ளனர். 

டைப்-1ன் வகையை சேர்ந்த நோயாளி களுக்கு 15 ஆண்டு களாக நீரிழிவு இருந்தால் அவர்களது கண்பார்வை 100 சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
நீரிழிவு ஏற்படுத்தும் பார்வை இழப்பை தடுப்பது எப்படி?
டைப்-2 வகையினருக்கு நீரிழிவு நோய் 15 ஆண்டுகள் நீடித்தால் 30 சதவீதம் பேரின் கண் பார்வை கடுமை யாக பாதிக்கப் படுகிறது. 

எனவே 30 வயதுக்கு பிறகு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்தால், இந்நோயாளிகள் உடனடியாக மருத்து வரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். 

அதிலும் விழித்திரை நிபுணரிடம் (ரெட்டினா ஸ்பெஷலிஸ்ட்) சென்று `செக்-அப்’ செய்வது மிகவும் நல்லது.

பரிசோதனை…

எப்.எப்.ஏ. (திதிகி) என்ற கண் பரிசோதனை மூலம் நீரிழிவால் ஏற்படும் ரத்த நாள கோளாறு களை கண்டறிய முடியும். இப்பரிசோதனைக்கு பிறகு கண்ணுக்குள் இன்ட்ரா விட்ரியாஸ் என்ற ஊசி மருந்தை ஊசி மூலம் செலுத்துவோம்.

கண்ணுக்குள் வி.இ.ஜி.எப். ரசாயனம் உண்டு. இந்த ரசாயனத்துக்கு எதிராக வி.இ.ஜி.எப். மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் ரத்தநாள கோளாறு குணமாகும். 
இதில் கையின் ரத்த நாளங்களில் மருந்தை செலுத்தி விழித்திரையில் லேசர் செய்ய வேண்டிய இடங்களை கண்டறியலாம். 

பரிசோதனை மூலம் லேசர் கிரணங்களை உள்ளே செலுத்தி கண்களில் கத்தி வைக்காமல், விழித் திரையின் சிகிச்கை செய்ய முடியும்.

சிகிச்சைகள்…  லேசர் சிகிச்சை : 

1. நீரிழிவு நோய் காரண மாக கண்களில் இருந்து நீர் கசிந்தால் லேசர் சிகிச்சை மூலம் குணப் படுத்த முடியும்.

2. இன்ட்ரா விட்டிரியஸ் ஊசி.

3. விட்ரக்டமி. டிப்ஸ்…

நீரிழிவு நோயாளிகள் அனைவரும் கண்விழி பரிசோதனை செய்வது அவசியம். நீரிழிவு நோய் தனக்கு இருப்பது தெரிந்ததும் 
நீரிழிவு ஏற்படுத்தும் பார்வை இழப்பை தடுப்பது எப்படி?
கண் மருத்துவரை சந்தித்து பரிசோதனை மேற்கொண்டால் கண் பார்வை குறைபாடு ஏற்படுவதை தடுத்து விடலாம். 

கண் மருத்துவரிடம் தொடக்கத் திலேயே சிகிச்சை செய்யா விட்டால் கண் பார்வை பறிபோவதை தடுப்பது கடினம் என்கிறார் டாக்டர் வசுமதி வேதாந்தம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)