ஹார்ட் அட்டாக்கை எளிதாக அறிய | Heart Attack Easy to learn !

0
உலகிலேயே மிக அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது இந்தியாவில் தான்’ என்கிறது உலகச் சுகாதார நிறுவன த்தின் ஆய்வு ஒன்று. 




`உண்மை யில், மாரடைப்பு போன்ற இதய நோய்களால் ஏற்படக் கூடிய உயிரிழப்பு களும் தவிர்க்கக் கூடியவையே! 

ஆனால், அவற்றைச் சரியாக அடையாளம் காணாததால் அல்லது அலட்சியப் படுத்துவ தால் தான்

பலரும் இதயக் கோளாறு களுக்கு ஆளாகி றார்கள்’ என்கிறார்கள் மருத்து வர்கள். 

மருத்துவத் தொழில் நுட்பம் முன்னேறி யிருக்கும் இந்தக் காலத்தில், இதற்குப் பல்வேறு பரிசோதனை களும் வந்து விட்டன. 

அவற்றில் ஒன்று தான் ‘ஸ்ட்ரெஸ் டெஸ்ட்’ (Stress Test). சிலருக்கு மாரடைப்புப் பிரச்னை ஆரம்ப நிலையில் இருக்கும். 

ஆனால், அறிகுறிகள் வெளியில் தெரியாது. இ.சி.ஜி எடுத்துப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. 

இந்த நிலையில் உள்ளவர் களுக்கு ‘ஸ்ட்ரெஸ் டெஸ்ட்’ உதவியாக இருக்கும். 

இதனால் ஆரம்ப நிலை யிலேயே இதய அடைப்பு களைக் கண்டறிந்து, மாரடைப்பு பாதிப்புகளி லிருந்து தப்பிக்கலாம்.

ஸ்ட்ரெஸ் டெஸ்ட்

ட்ரெட்மில் இயந்திர த்தில் ஒருவரை நடக்க வைத்து, அவரின் இதயத்துடிப்பு மாறுதல் களை இ.சி.ஜி மூலம் கண்டறியும் 

பரிசோதனை க்கு `ட்ரெட்மில் டெஸ்ட்’ (Treadmill Test -TMT) அல்லது `கார்டியாக் ஸ்ட்ரெஸ் டெஸ்ட்’ (Cardiac Stress Test) என்று பெயர்.

பரிசோதனை

கம்ப்யூட்டர் மற்றும் இ.சி.ஜி கருவி இணைந்த இயந்திரம் இது. இந்த இ.சி.ஜி-யின் லீடுகளை (Lead) 



ஒருவரின் கை, கால்கள், மார்பு போன்ற இடங்களில் பொருத்தி, ட்ரெட்மில்லில் குறைந்த வேகத்தில் நடக்க வைப்பார்கள். 

பின்னர் வேகம் ஒவ்வொரு மூன்று நிமிடத்து க்கும் படிப்படி யாக அதிகரிக்கப் படும். இதனால் நோயாளி யின் நடை வேகமும், இதயத் துடிப்பும் அதிகரிக்கும். 

அப்போது இதயத் துடிப்பு, இதயத்தில் ஏற்படும் மாற்றங்கள், ரத்த அழுத்தம் போன்ற வற்றை இ.சி.ஜி கருவி வரை படமாகப் பதிவு செய்யும். 

நான்கு கட்டங் களாக நடக்கும் இந்தப் பரிசோதனை யில் ரத்தக் குழாயில் அடைப்பு கண்டறியப் படும்.

நேரம்

10 முதல் 15 நிமிடங் களில் செய்யப்படும் எளிய பரிசோதனை இது.

சோதனையின் அடிப்படை

ஒருவர் சாதாரண மாக இருப்பதை விட, கடினமான வேலை செய்யும் போது, அதிக ஆற்றல் தேவைப்படும். 

அதற்கேற்ப இதயத்துக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்ல வில்லை என்றால், அவர்களு க்கு மார்பில் வலி ஏற்படும். 

அதனால், அவரை வேகமாக நடக்க வைத்து, இதயத்துக்குப் பளுவை அதிகப் படுத்தி, நெஞ்சு வலி வருகிறதா என்பதையும், 

இ.சி.ஜி காண்பிக்கிற மாற்றங்களை வைத்தும் ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதைக் கண்டறி வார்கள்.

பயன்

மறைந்தி ருக்கும் மாரடைப் பையும் அவ்வப் போது வந்து செல்கிற இதய வலியையும் அடையாளம் காட்ட உதவும் முக்கிய மான பரிசோதனை இது.

யாருக்கு அவசியம்?

மார்பில் வலி, இறுக்க உணர்வு உள்ளவர்கள், ரத்த அழுத்தம், நாள்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள்,




தலைச் சுற்றல், மயக்கம், மூச்சு வாங்குதல் போன்ற அறி குறிகள் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ள வர்கள். 

மேலும், இதய நோய் பாதிப்புள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் களுக்கும் வர வாய்ப்பு இருக்கிறது. 

அவர்களும் இந்தப் பரிசோத னையை மேற்கொள்வது நல்லது.

யாரெல்லாம் செய்யக் கூடாது?

* கடுமையான மாரடைப்பு வந்தவர்களும், நிலை யில்லாத மாரடைப்பு (Unstable angina) வந்தவர்களும்.

* இதயச் செயலிழப்பு உள்ளவர்கள்.

* உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)