நாய் கடித்து விட்டால் இதை செய்யாதீங்க !

உலகளவில் கணக்கிட்டு பார்த்தால் வெறி நாய்க்கடியால் இறப்பவர் களில் 80 வீதம் பேர் இந்தியர்கள் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித் துள்ளது.

நாய் கடித்து விட்டால் இதை செய்யாதீங்க !
நாய் கடித்து விட்டால் உடனடியாக செய்ய வேண்டிய சிகிச்சை களை தவிர்த்து, பதற்றத்தில்

என்ன செய்கிறோம் என்று தெரியாமல் மாற்று சிகிச்சை களை மேற்கொள்வ தால் தான் விளைவுகள் அதிகரிக் கின்றன.
சரி இப்பொழுது நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்..

முதலுதவி
நாய் கடித்து விட்டால் முதலுதவி
முதலில் கடித்த இடத்தில் கிருமிகளின் எண்ணி க்கையை குறைக்கும் விதமாக நாய் கடிபட்ட இடத்தை உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும்.

வேகமாக விழுகிற குழாய் நீரை திறந்து விட்டு 5 நிமிடங்கள், நன்கு ரத்தம் வெளியேறும் வரை கழுவி விட்டு

அதன் மேல் டிஞ்சர் பென்சாயின் அல்லது டிஞ்சர் அயோடின் போன்ற மருந்தை தடவலாம்.

பின்பு, தாமதிக் காமல் மருத்து வரிடம் சென்று, முறை யான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

கடித்தது வெறி நாயாக இருந்தாலும், சாதாரண நாயாக இருந்தாலும் முதலில் தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும்.
முதியவரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொலை செய்த வேலையாள் !
ஏனெனில் நாம் வளர்க்கும் சாதாரண நாய், குட்டி நாய்க்கு வெறிநோய் (ரேபிஸ்) தாக்கம் இருப்பது நமக்கு தெரிய வாய்ப்பில்லை.

வெறிநாய்க் கடி தானா என்பதை எப்படி கண்டறிவது?
வெறிநாய்க் கடி தானா என்பதை எப்படி கண்டறிவது?
கடித்தது வெறி நாயாக இருந்தால் 10 நாட்களில் வெறி நோய்க்கான அறிகுறிகள் தென்படும்.

அனைத்து உயிரற்ற பொருட் களையும் கடித்தல், வழக்கத் துக்கு மாறாக குரல் எழுப்புதல், உணவு எடுத்துக் கொள்ளாமை,

தண்ணீரைப் பார்த்தால் ஒவ்வாமை, அதிக உமிழ்நீர் சுரத்தல், தாடை தொங்கி விடுதல், தண்ணீரை விழுங்க முடியாமல் போவது,
மலேரியா காய்ச்சலுக்கு புதிய மருந்து !
பின் கால்களில் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் அந்த நாய்க்கு, கடித்த 10 நாட்களில் ஏற்பட்டால் வெறிநோய் தாக்கப்பட்டு இருப்பது நிச்சயம்.

இதற்காக 10 நாட்களுக்கு காத்திராமல், கடித்த அன்றே தடுப்பூசி போட அரம்பித்து விட வேண்டும்.

முதல் தடுப்பூசி மட்டும் போட்டு விட்டு, நாம் தடுப்பூசி போட்டு விட்டோம் என நிறுத்தி விடக் கூடாது. நாய் கடித்தவுடன் வெறிநோய் தடுப்பூசி போடுவது மட்டுமே உயிரை காக்கும்.

சரி இப்பொழுது நாய் கடித்தால் என்ன செய்யக் கூடாது என்பதை பார்க்கலாம்..
நாய் கடித்த இடத்தில் கட்டுப் போடக்கூடாது. சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்து விடும் என்பதால் காயத்தை மூடாமல் வைத்தி ருப்பது நல்லது.

திறந்த காய மென்றாலும், ஆழமான காயமென்றா லும் கட்டு போட்டு மூடக் கூடாது.
நாய் கடித்த இடத்தில் கிருமிகள் உடலை விட்டு வெளியேறுவது தடைபடும் வகையில், சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச் சாறு போன்ற வற்றைத் தடவக் கூடாது.
எந்த காயத்திற்கு எந்த ஊஸி போடுவது?

டிடி ஊசி – இது எந்த விலங்கு கடித்தாலும் போட வேண்டியது.

ரேபிஸ் ஊசி- அரசு மருத்துவ மனையில் இது இலவசமாக் போடப்படும் (தனியாரில் ரூ 350-500 வரை ஆகும்).

இம்யுனொக்லொபின் - அதிகமான அளவில் உள்ள காயதிற்கு கட்டாயம் போட வேண்டும்.இதுவும் இலவச மாக கிடைக்கும்.

நாய்க் கடித்த சிறிது நேரத்தி லேயே தடுப்பூசி போட்டு விட வேண்டும். இதை “0′ நாள் என்பர்.

எந்த காயத்திற்கு எந்த ஊஸி போடுவது?
பின் 3வது நாள், 7வது நாள், 14வது நாள், 28வது நாள் என, 5 தடவை தடுப்பூசி போட வேண்டும்.

தடுப்பூசி போடுவ தற்கு முன்னும், பின்னும் கடிபட்ட இடத்தை ஆல்கஹால் அல்லது டிங்சர் வைத்து சுத்தம் செய்யக் கூடாது. 
ஏனெனில், அது, தடுப்பூசியில் உள்ள ரேபிஸ் எதிர்ப்பு கிருமிகளை அழித்து விடும். தடுப்பூசி போடும் போது ஏதேனும் உணவில் கட்டுப்பாடு தேவையா?

தடுப்பூசி போடும் போது உணவில் கட்டுப்பாடு அவசியம் இல்லை. எவ்வகை உணவை யும் உண்ணலாம். ஆனால் மது மட்டும் அருந்த கூடாது. 
மதுபானம் நம் உடலின் எதிர்ப்புத் திறனை மிகவும் குறைப்பதால் நுண் கிருமியினால் விளையும் சேதம் அதிகரிக்கும்.
Tags: