விளையாட்டால் வந்த வினை நடிகை மருத்துவமனையில் அனுமதி !

0
பிரபல பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜாக்குலின் பெர்னான்டஸ், இவர் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடித்து வெளியான Race 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.
விளையாட்டால் வந்த வினை நடிகை மருத்துவமனையில் அனுமதி !
இந்நிலையில் இந்த படத்தின் தொடர்ச்சியாக Race 3 திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்திலும் கதா நாயகியாக ஜக்குலின் தான் நடித்து வருகிறார். 
 
இந்த படத்தின் படபிடிப்புக் காக படக்குழுவினர் அபுதாபி சென்றிருக்கிறார். அவர்களோடு ஜக்குலினும் சென்றிருந்தார். அப்போது அங்கு பிரபலமான ஸ்குவாஷ் என்னும் விளை யாட்டை விளையாடி இருக்கிறார் ஜக்குலின். 

அப்போது எதிர்ப்பாராத விதமாக பந்து அவரது கண்ணில் பட்டு ரத்தம் வர ஆரம்பித் துள்ளது. பதறிப் போன படக்குழு நாயகியை உடனே மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அவரது கண்களில் இருந்து நிற்காமல் ரத்தம் வருவதால் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.
ஆனால் அவரது கண்களில் என்ன பிரச்சனை என்ற விவரங்களை மருத்து வர்கள் தெரிவிக்க வில்லையாம்.

இந்த சம்பவம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் கூறுகை யில், நடிகைக்கு கண்ணில் அடிபட்டு ள்ளது உண்மை தான். 

பயப்புடும் அளவிற்கு எதுவும் இல்லை, அவருக்கு மிகவும் சாதாரண அடி தான் என மருத்து வர்கள் தெரிவித்து ள்ளனர். மேலும் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)