கோவையைக் கலங்கடித்த கல்யாண மன்னன் !

0
இரண்டாவது திருமணம் என்கிற பெயரில் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து, அந்தப் பெண்களிடமிருந்து கோடிக் கணக்கில் சுருட்டிய 
கோவையைக் கலங்கடித்த கல்யாண மன்னன் !
கல்யாண மன்னன் புருஷோத்த மனையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய மகள் கீதாஞ்சலியையும், நேற்று இரவு கோவை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், வெள்ளலூரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். முதல் மனைவியை இழந்த புருஷோத்த மனுக்கு 57 வயது ஆகிறது. 20 வயதில் கீதாஞ்சலி என்ற மகள் இருக்கிறார். 

ட்ரான்ஸ்போர்ட் பிசினஸ் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் புருஷோத்தமன், இரண்டாவது திருமணம் என்கிற பெயரில் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் கோடிக் கணக்கில் பணத்தைச் சுருட்டியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, புருஷோத்தமனால் பாதிக்கப்பட்ட கோவை பாப்ப நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரால் அம்பலமானது, 

புருஷோத்த மனின் லீலைகள். கோவை காந்திபுரத்தில் உள்ள மெட்டி ஒலி திருமணத் தகவல் மையத்தின் உரிமை யாளர்களான வனஜா குமாரியும், 
மோகனும் தங்கள் மையத்தில் இரண்டாம் திருமணத் திற்காகப் பதிவு செய்திருந்த கணவரை இழந்த பணக்காரப் பெண்களை புருஷோத்த மனுக்கு அறிமுகம் செய்து வைத்து திருமணம் முடித்து வைத்தது போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், புருஷோத்த மனின் மகள் கீதாஞ்சலியும், தனது தந்தைக்கு உடந்தை யாக இருந்ததும் தெரிய வந்தது. 

பெண்கள் ஒவ்வொரு வரிடமும், விதவிதமான பொய்களைக் கூறி கோடிக் கணக்கில் மோசடி செய்த புருஷோத்தமன், போலீஸில் புகார் அளிக்கப் பட்டதும் தலை மறைவானார். 

காவல் துறையினர் தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடிக் கொண்டிருந்த நிலையில், புருஷோத்தமன் (28.1.2018 அன்று) கைது செய்யப் பட்டார் என்று தகவல் வெளி யானது. 
ஆனால், போலீஸார் அதை மறுத்தனர். இந்நிலையில், புருஷோத்த மனையும் அவருடைய மகள் கீதாஞ்சலியையும் நேற்று இரவு கைது செய்து, மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)