மக்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் தலைமை... ஏ.ஆர்.ரஹ்மான் !

0
ரஜினிகாந்த் அரசியல் வருகை அறிவிப்பை அடுத்து அவரை வரவேற்ற இசையமை ப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தமிழகத்துக்குத் தேவை வலுவான தலைமை என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் தலைமை... ஏ.ஆர்.ரஹ்மான் !
ஜனவரி 12-ம் தேதி சென்னை யில் நடைபெறும் 7அப் 'நேற்று இன்று நாளை' இசை நிகழ்ச்சியை அடுத்து சென்னை யில் நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பில் ஏ.ஆர். ரஹ்மான் கூறியதாவது:

'மாநிலத்து க்கு வலுவான தலைமை வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் கருது கிறேன். 

யார் வந்தாலும் சரி, ரஜின்காந்த் அல்லது வேறு யாராக இருந்தாலும் மக்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். உள்கட் டமைப்பு வசதிகள், இசை, கலைகளை மேம்படுத்த வேண்டும். 

அனைத்து விவசாயி களுக்கும் வாழ்க்கை இன்னும் மேம்பட வேண்டும். அதிசயம் நிகழ வேண்டும் என்று நான் உணர்கிறேன் என்றார் ஏ.ஆர். ரஹ்மான். 

மேலும் திரைத் துறைக்குள் நுழைந்து 25 ஆண்டுகள் நிறை வடைந் ததைக் கொண்டாடும் சென்னை இசை நிகழ்ச்சி பற்றி கூறும் போது, 
நான் அயல் நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் போது, சென்னை யில் எப்போது இது போன்று இசை நிகழ்ச்சி நடத்தப் போகிறோம் என்ற எண்ணம் ஏற்படும். இப்போதுதான் அதற்கு நேரம் வந்துள்ளது என்றார்.

நாளை மறுநாள் ஜனவரி 6-ம் தேதி தனது 51-வது பிறந்த நாளை ஏ.ஆர். ரஹ்மான் கொண்டாடு கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)