கொத்தடிமையாக மாட்டிக் கொண்ட ஆசிரியர்.. மீட்ட தமிழர்கள் !

0
கெளரவமான வேலை வாங்கித் தருகிறோம் என்று சொல்லி சில ஏஜென்சி நிறுவனங்கள் குடும்பப் பெண்களை வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்து... 
கொத்தடிமையாக மாட்டிக் கொண்ட ஆசிரியர்.. மீட்ட தமிழர்கள் !
அங்கே வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பது பற்றியும், அடிமையாய் வைத்திருப்பது பற்றியும் நாம் செய்தித் தாள்களிலும், சமூக வலை தளங்களிலும் படித்து வருகிறோம். 

இந்த நிலையில், சமீபத்தில் சிவகங்கையைச் சேர்ந்த ஒரு பட்டதாரி பெண் இது போன்ற அவஸ்தைக்கு ஆளாகியுள்ளார். 

அவரை, தமிழகச் சேவைக் குழு மலேசியா அமைப்பினர் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து 'தமிழகச் சேவைக் குழு மலேசியா’ நிறுவனரும், மலேசியா வாழ் தமிழருமான நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூர்த்தியிடம் பேசினோம். 
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பானு (பெயர் மாற்றப் பட்டுள்ளது). முதுகலை பட்டதாரியான இவரிடம், திருச்சியைச் சேர்ந்த சிவா (ஏஜென்ட்) என்பவர், 

மலேசியா வில் குழந்தை களுக்கு டியூஷன் எடுக்கும் வேலைக்கு உங்களை அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லி அந்த நாட்டில் வசிக்கும் இன்னொரு பெண் ஏஜென்டிடம் பானுவை அனுப்பி வைத்துள்ளார். 

அந்தப் பெண் ஏஜென்ட், சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத் திடம் வீட்டு வேலை செய்வதற் காகப் பானுவை 5,000 வெள்ளிக்கு விற்றுள்ளார். 

அந்த வீட்டு உறுப்பி னர்கள், பானுவை வெளியில் எங்கும் அனுப்பாமல் வீட்டில் அடைத்த படியே மிகவும் கடுமையாக வேலை வாங்கி யுள்ளனர். 

அதுமட்டு மன்றி, போதுமான உணவையும் அளிக்காமல் கொடுமைப் படுத்தி வந்துள்ளனர். தொலைபேசி இணைப்பையும் கட் செய்துள்ளனர். 
இரண்டு மாத விசா அனுமதி யோடு டியூஷன் எடுக்க வந்த பானு, இப்படியான துன்பங்க ளோடு ஒன்றரை வருடம் வீட்டில் அடைத்து வைத்துக் கொடுமைப் படுத்தப்பட் டுள்ளார். 

இந்த நிலையில், பாதிக்கப் பட்ட அந்தப் பெண் எங்கள் குழுவைப் பற்றிய தகவல் தெரிந்து எங்களை அழைத்துப் பேசினார். 

பின் தமிழகச் சேவை குழுவின் தலைவர் காளையப்பனும் அவரது குழுவும் அங்கு சென்று அவரை மீட்டெடுத்து விசா உரிமம் 

காலாவதி யானதற்கு அபராதம் செலுத்தி இந்தியத் தூதரகத்தின் துணையோடு அவரைத் தமிழகத் துக்கு 

அனுப்பி வைத்தோம்” என்றவர், “இப்படிப் பல பெண்கள் இங்கு சிக்கிக் கொண்டி ருப்பதாக எங்களு க்குத் தகவல் கிடைத்துள்ளது. 

அவர்களை யும் நாங்கள் விரைவில் மீட்டெடுக்க உள்ளோம். இதேபோல் பாதிக்கப் பட்ட ஒரு பெண்ணைக் கடந்த மாதம் தமிழகத் துக்கு அனுப்பி வைத்துள்ளோம். 
இது போன்று பாதிப்புக் குள்ளாகும் நபர்களை மீட்டெடுத்து அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதிலும், 

இறந்தவர் களின் சடலங்களை அவர்களுடைய ஊருக்கு இலவசமாக அனுப்பி வைப்பதிலும் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். 

இந்த அமைப்புக்குப் பெரிதும் துணையாக நிற்பது இந்தியத் தூதரகமே ஆகும் என்றவரிடம், வெளிநாட்டில் பெண்கள் இப்படிச் சிக்கிக் கொள்வதற்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டோம்.

மலேசியா பாஸ்போர்ட்டில் இ.சி.ஆர். (Emigration Check Required), இ.சி.என்.ஆர். (Emigration Check Not Required) என இரண்டு வகை உண்டு. 

இதில் குறைவாகப் படித்த வர்கள் வெளிநாடு சென்று ஏமாறாமல் இருப்பதற்கு அவர்களு க்குக் குறிப்பிடப் பட்ட நிறுவனத்தில் வேலை கிடைத் துள்ளதா, 
இவர்களை அழைத்துச் செல்லும் ஏஜென்சி நம்பகத் தன்மை வாய்ந்ததா என்பதை ஆராய்வதற் காக உள்ளதே இ.சி.ஆர். 

மற்றொரு வகையான இ.சி.என்.ஆர். என்பது மேற்படிப்பு படித்தவர் களுக்கு, அவர்கள் வேலை செய்யப் போகும் நிறுவன த்தைப் பற்றி அறிந்து வைத்தி ருப்பதாகும். 

இந்த இ.சி.என்.ஆர். பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்பவர்கள் தாம் அதிகளவில் ஏமாற்றப் படுகின்றனர். இவர்கள், ஆரம்பத்தில் குறைந்த கால விசாவில் வெளிநாடு செல்வார்கள். 

அங்கு சென்று வேலை பார்க்கும் நிறுவன த்தின் ஆணையை வைத்து பணி முடிவடையும் காலம் வரை விசாவை நீட்டிப்பது வழக்கம். 

ஆனால், வேலையே கிடைக்காமல் ஏமாற்றம் அடைபவர் களுக்கு விசா நீட்டிக்கவும் முடியாமல் போதுமான பணம் இல்லாமல்; சொந்த ஊருக்குத் திரும்பவும் முடியாமல் அங்கேயே சிக்கிக் கொள்கின்றனர். 
இதனால் தான் இந்தத் துன்பங்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது என்றார் மிகத்தெளிவாக. பாதிக்கப்படும் நபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் தமிழகச் சேவைக்குழு மலேசியாவுக்கு ஒரு ராயல் சல்யூட்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)