தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?





தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
தேங்காயில் உள்ள ஃபேட்டி ஆசிட் (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?
இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. 

குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக் கூடாது என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.
அதே வேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப் பட்டுள்ளன.
தென்னை யின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். 

தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப் பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்து வர்கள்.

தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கை யில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என 

எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதை தான். தேங்காய், மங்கள கரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. மருத்துவ த்தின் அடையாளச் சின்னமும் கூட என்கிறது சித்த மருத்தவம்.

இந்தியாவு க்கு, ஆயிரம் ஆண்டு களுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல் கள் தெரிவிக் கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை.

விதை வளர்த்து மரமான பின் விதைத் தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம் பிள்ளை” என்று அழைக் கிறார்கள். 
தேங்காய் உள்பட தென்னை மரத்தி லிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் : 
ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? 

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என 

உடல் இயக்க த்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்து களும் தேங்காயில் உள்ளன. 

தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? 

தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்து வத்தில் பல்வேறு மருந்து களில் சேர்க்கப் படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். 
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்க ளுக்குத் தயாரிக் கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப் படுகிறது.

மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப் போக்கு, தென்னை மரத்தின் வேரிலி ருந்து எடுக்கப் படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன் படுத்தப் படுகிறது. 

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ் சீரகத்தை யும் சேர்த்து தோல் நோய்களுக் கான மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன.

தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக் கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப் படுத்துகிறது. 

மூல முளை, ரத்த மூலம் போன்ற வற்றுக்கு தென்னங் குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப் படுகிறது. 
தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப் படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்ற வற்றுக்குத் 

தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக் கப்படும் தைலங்கள் பல்வேறு நோய் களுக்கு அருமருந்து.
தைலங்கள்: 

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக் கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்து கின்றன. 

நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக் கான கரப்பான் தைலம், 

வாத வலிகளைக் குணப் படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன் படுத்தப்படும் நீலபிரிங் காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், 

தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

எளிதில் ஜீரணமாகும் : 
தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரண மாகும். குழந்தை களுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. 

தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக் காரர் களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும்.

தேங்காய்ப் பாலை விளக்கெண் ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப் படுத்தும்.
வயிற்றுப் புண்கள் : 

தேங்காய்ப் பாலில் காரத் தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. 

உடலுக்குத் தேவை யான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத் துக்குப் பெரிதும் உதவுகிறது.
தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? 

மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள 

கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங் களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன.

இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன.
வைரஸ் எதிர்ப்பு: 

தேங்கா யில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண் கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்ட தாக உள்ளது.
தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளி களுக்கு வைரல் லோடைக் குறைக் கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். 

உடலின் வளர்ச்சிதை மாற்றத் துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப் படுத்துகிறது.

ஆண்மைப் பெருக்கி : 

முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கி யாகப் பயன் படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப் படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக: குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற் காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். 
அது போல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணி களுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.
இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. 

இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும்.
தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?
உடலில் நீர்ச்சத்து குறையும் நிலையில் அதைச் சரிசெய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறு நீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். 

ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தை களுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக் குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத் தன்மை காரணமாக காலரா நோயாளி களுக்கு நல்ல சத்து. 

ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளி களுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்த லாம். 
இளநீர் மிக மிகச் சுத்தமானது. இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன் படுத்தப் படுகிறது. 
ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன் படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் ஜெல் என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. 

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள் களும் நிறைந் துள்ளன. 

பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. 
இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப் பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணை யானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. 

ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்..
Tags: