ஜெயலலிதா எனும் இரும்பு மனுசி சகாப்தம் | Jayalalitha is the Iron lady Era !

0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் பாதிக்கப் பட்டு அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரண மடைந்தார். அவருக்கு இன்று முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப் படுகிறது.
ஜெயலலிதா எனும் இரும்பு மனுசி
ஆளுமை திறன், எதற்கும் அஞ்சாத துணிவு, யாருக்கும் அடிப்பணி யாத தன்மை, திட்டங் களை வகுப்பதில் வல்லமை என பன்முகத் தன்மை கொண்டவர் ஜெயலலிதா. எந்த தேர்தலாக இருந்தாலும் இவருடன் கூட்டணி வைக்க போட்டி போடு வார்களே தவிர, இவர் யாரிடமும் கூட்டணிக் காக அணுகிய தில்லை.


அமைச்சர் களோ, அதிகாரி களோ ஊழல் குற்றச் சாட்டுகளில் ஈடுபட்டால் கார்டனு க்கு வர வழைத்து அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார். தமிழக மக்களு க்கு பல்வேறு நலத்திட்டங் களை செயல் படுத்தியதால் அனைவ ராலும் அம்மா என்று அழைக்கப் பட்டார்.

அப்பல்லோவில் அனுமதி

ஜெயலலிதா வுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறை பாட்டினால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இதை யறிந்த தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் காத்து கிடந்தனர்.

ஒன்றும் இல்லை நன்றாக இருக்கிறார்

ஜெயலலிதா வுக்கு ஒன்றும் இல்லை. அவர் உடல்நல ஆரோக்கி யத்துடன் இருக்கிறார். காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது என்றும் அவர் வழக்கமான உணவு களை உட்கொள் கிறார் என்றும் மருத்துவ மனை அறிக்கை களை அளித்தன. 

இது அங்கு கூடியிருந்த மக்களுக்கு சற்று தெம்பை அளித்தது. ஜெயலலிதா மருத்துவ சிகிச்சைக் காக வெளியூர் செல்வதாக கூறப்பட்ட வதந்தி களை மருத்துவ மனை நிர்வாகம் மறுத்து விட்டது.

லண்டன் மருத்துவர் பீலே

லண்டன் பிரிட்ஜ் மருத்துவ மனையின் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்து ஜெயலலிதா வின் உடல் நிலையைப் பார்வை யிட்டார். பின்னர் அவருக்கு ஏற்பட்டிருந்த நோய் தொற்றை தடுப்பதற்கான மருந்துகளையும் பரிந்துரைத்தார். 

ஜெயலலிதா வின் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவதால் அவர் இன்னும் கொஞ்ச காலத்துக்கு மருத்துவ மனையில் தங்கி யிருக்க வேண்டும் என்று மருத்துவ அறிக்கையை அப்பல்லோ வெளியிட்டது.

எய்ம்ஸ் மருத்துவ மனை

ஜெயலலிதா வின் உடல் நிலையை கண்காணிக்க எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் அப்பல்லோ விற்கு வருகை தந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி ஜெயலலிதா கூறியதாக அதிமுக சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டது. 

அதில் மக்கள் மற்றும் தொண்டர் களின் பிரார்த்தனை யால் நான் மறுபிறவி எடுத்துள்ளேன். உங்கள் அன்பு இருக்கும் போது எனக்கு என்ன பாதிப்பு வந்து விடும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

நோய் தொற்று காரண மாக ஜெயலலிதா வை பார்க்க யாருக்கும் அனுமதி யில்லை.

டிசம்பர் 4-ஆம் தேதி மாரடைப்பு

அப்பல்லோ மருத்துவ மனையில் ஜெயலலிதா வுக்கு சுமார் 74 நாள்கள் சிகிச்சை அளிக்கப் பட்ட நிலையில் அவருக்கு டிசம்பர் 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதா எனும் இரும்பு மனுசி சகாப்தம்

இதை யடுத்து அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப் பட்டன. லண்டன் மருத்துவ மனை மருத்துவர் பீலே வர வழைக்கப் பட்டார்.

ஆனால் நிலைமை கையை சென்று விட்டதாக பீலே தெரிவித்தார். ஜெயலலிதா வின் உயிரை காக்க பல்வேறு உயிர் காக்கும் முயற்சிகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டன.

ஜெயலலிதா மண்ணுலகை விட்டு பிரிந்தார்


ஜெயலலிதா வுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டும் டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவ மனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. 

இதனால் தமிழகமே அதிர்ச்சி அடைந்தது. என்றாவது ஜெயலலிதா வின் முகத்தை பார்த்து விடுவோம் என்று எண்ணி மருத்துவ மனை வாயிலில் காத்திருந்த மக்கள், தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினார்.

ஜெ.உடல் நல்லடக்கம்

ஜெயலலிதா வின் உடல் டிசம்பர் 6-ஆம் தேதி ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக் காக வைக்கப் பட்டது. பின்னர் மெரினா வில் எம்ஜிஆர் சமாதிக்கு அருகில் ஜெயலலிதா வின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.

இன்றுடன் இந்க மாபெரும் சகாப்தம் முடிவடைந்து ஓராண்டுகள் நிறை வடைகிறது. ஜெயலலிதா மறைந் தாலும் அவர் ஆற்றிய திட்டங்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)