சிக்சர் மழையில் ரோஹித் - 3-வது இரட்டைச் சதம் !

0
மொஹாலியில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா
சிக்சர் மழையில் ரோஹித் - 3-வது இரட்டைச் சதம் !
ஒரு நாள் போட்டிகளில் 3-வது இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை புரிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 392 ரன்கள் குவித் துள்ளது.

கடந்த போட்டியில் 29/7 என்று சரிந்த இந்திய அணி எப்படியும் தன்னம் பிக்கையுடன் ஆட முடியாது என்ற தன்னம் பிக்கையில் திசர பெரேரா டாஸ் வென்று இந்திய அணியை பேட் செய்ய அழைத்தது உளவியல் ரீதியாக சரியானதே.

ஆனால் பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலை களையும் கணக்கில் எடுத் திருக்க வேண்டும். டாஸ் முடிவை நியாயப் படுத்தும் விதமாக முதல் 10 ஓவர்களில் தவண், ரோஹித் சர்மா 33 ரன்களையே எடுத்தனர்.

இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் உலக அளவில் அதிக ரன்களான 264 ரன்களைக் குவித்து சாதனை புரிந்த ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியா வுக்கு எதிராக 209 ரன்களை எடுத்த தோடு இன்று இலங்கை க்கு எதிராக
மீண்டும் ஒரு இரட்டைச் சதம் எடுத்து ஒரு நாள் போட்டி களில் தனது 3-வது இரட்டைச் சதம் அடித்து சாதனை புரிந்துள்ளார்.

நன்றி: இலங்கை அணியின் புல்டாஸ்கள்!

சிக்சர்கள் மழையில் மொஹாலி ரசிகர்களை நனைய விட்ட ரோஹித் சர்மா 13 பவுண்டரிகள் 12 சிக்சர்களுடன் 153 பந்துகளில் 208 ரன்கள் எடுத்து ஆட்ட மிழக்காமல் இருந்தார்.

115 பந்துகளில் தான் சதம் எடுத்தார் ரோஹித் சர்மா ஆனால் அதன் பிறகு ஆடியது ருத்ர தாண்டவம் என்றால் மிகை யாகாது. இந்த தாண்டவ த்தில் அடுத்த 36 பந்துகளில் 100 ரன்களை விளாசினார்.

49-வது ஓவர் முடிவில் 191 ரன்களில் இருந்த ரோஹித் சர்மா இரட்டைச் சதம் அடிப்பாரா என்ற ஆவலைத் தூண்டினார்.

எதிர் பார்ப்புக் கிணங்க திசர பெரேரா வந்து தனது இன்னொரு புல்டாஸை மிடில் ஸ்டம்பில் வீச ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ்.

அதன் பிறகு இரண்டு 2 ரன்களை எடுத்து சாதனை இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார் ரோஹித் சர்மா. அஞ்சேலோ மேத்யூஸ் 4 ஓவர்கள் மட்டுமே வீசி 9 ரன்களை மட்டுமே கொடுத் திருந்தார். 

அவருக்கு பவுலிங் கொடுக்காதது புதிராக இருந்தது. இதோடு திசர பெரேரா புல்டாஸ் களை கட்டுப் படுத்த முடிய வில்லை என்று தெரிந்தும் தொடர்ந்து வீசியதன் மர்மமும் புரிபட வில்லை.
மொத்த த்தில் அவர் 8 ஓவர்களை வீசி 80 ரன்களை வாரி வழங்கினார். இதில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும். 10 ஒவர்கள் முடித்த நுவான் பிரதீப் 106 ரன்களை விட்டுக் கொடுத்தார். 

இதில் 9 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடங்கும். சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயா பாராட்டுக் குரியவர் அவர் 10 ஓவர்களை முடித்து 51 ரன்களையே விட்டுக் கொடுத்தி ருந்தார்.

கடந்த போட்டியின் நாயகன் சுரங்க லக்மல் இன்று முதல் 7 ஒவர்களில் 45 ரன்கள் என்று வாங்கினார், ஆனால் 8-வது ஓவரில் ரோஹித் சர்மா இவரை 4 சிக்சர்களை விளாசியதில் 8 ஓவர்கள் 71 ரன்கள் என்று வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இலங்கை அணியினர் வைடு யார்க்கர் களை வீசிப் பார்த்தனர் பயனில்லை, நேர் யார்க்கர்கள் அனைத்தும் தாழ்வு புல்டாஸ் களாக, வாகான புல்டாஸ் களாக மாறின.

ஷிகர் தவண், ஷ்ரேயஸ் ஐயர் அபார அரைசதங்கள்:
ரோஹித் சர்மா ருத்ர தாண்டவத்துக்கு முன்பாக ஷ்ரேயஸ் ஐயர், ஷிகர் தவண் மிக அருமையாக ஆடினர், பக்கவாட்டு ஸ்விங் இல்லை, ஸ்பின் இல்லை,

ஒன்று மேயில்லாத பிட்சில் தாங்கள் தான் தாதா என்று ஆடும் இந்திய அணியில் ஷிகர் தவண் அனாயச மாக இத்தகைய பிட்சில் ஆடக்கூடியவர்,

இன்றும் அவர் 67 பந்துகளில் 9 பவுண்டரி களுடன் 68 ரன்கள் எடுத்து பதிரானா பந்தில் ஷாட் மிட்விக்கெட்டில் திரிமானே யிடம் கேட்ச் கொடுத்து வெளி யேறினார். 115/1 என்ற நிலை யில் 21.1 ஓவர்கள் முடிந்தி ருந்தன.

ஷ்ரேயஸ் ஐயரும் ரோஹித் சர்மாவும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக சுமார் 24 ஓவர்களில் 223 ரன்களை விளாசினர். தவண் ஷாட் தேர்வு அருமை, ஷார்ட் பிட்ச் போடும் புல்ஷாட், புல் பிட்ச் போடும் ஆஃப் திசையில் ட்ரைவ்,

லெக் திசையில் தட்டி விட்டு ஒன்று இரண்டு என்று எடுத்த வகையில் அவர் தன் இன்னிங்ஸை அருமை யாக கட்டமை த்தார்.

ஷ்ரேயஸ் ஐயர் களமிறங் கியவுடன் அதிரடி ஆட்டம் ஆடத் தொடங்கி னார். ரோஹித், ஐயர் கூட்டணி சுமார் 24 ஓவர்களில் 223 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.

ஷ்ரேயஸ் ஐயர் 70 பந்துகளில் 9 பவுண்டரிகள் 2 சிக்சர்க ளுடன் 88 ரன்கள் எடுத்து பெரேரா பந்தை தூக்கி அடித்து ஆன் திசையில் டீப்பில் கேட்ச் ஆனார்.

ஷ்ரேயஸ் ஐயரின் அதிரடி உத்வேகமாக அமைந்தது. பதிரனாவை இறங்கி வந்து லாங் ஆஃபுக்கு மேல் தூக்கி சிக்ஸ் விளாசினார். 

இதனால் லெந்தை மாற்றம் செய்ய வேண்டிய தாயிற்று ஷார்ட் பிட்ச் ஆக அதனையும் அடித்து நொறுக்கத் தொடங்கினார்.
ரோஹித் சர்மா 115 பந்துகளில் சதம் அடித்த பிறகு ஷ்ரேயஸ் ஐயர் மேலும் ஆக்ரோஷம் காட்டினார். ஆஃப் திசையில் வலுவான வீரராகத் திகழ்கிறார்,

பெரேரா வீசிய பந்து ஒன்றுக்கு ஒதுங்கினார், பெரேரா ஷார்ட் பிட்ச் பந்து வீச கிட்டத்தட்ட ஒரு கையில் அடித்த சிக்ஸ் அபாரமானது.

அதே போல் ரோஹித் சர்மாவின் புல்டாஸ் சிக்ஸ்களை விட வேகம் குறைந்த லெக் கட்டர் களை அடித்த சிக்சரும், நுவான் பிரதீப் வீசிய ஒரு பந்தை நேர் பேட்டில் லாங் ஆஃபில் அடித்த சிக்சரும் அபார மானது.

மீதி யெல்லாம் புல்டாஸ்கள், ஆனாலும் இவற்றை சிக்ஸ் அடிக்க வேண்டுமே? அதனை சிறப்பாகச் செய்தார் ரோஹித் சர்மா.

பாண்டியா வுக்குப் பதில் தோனியைக் களமிறக்கக் காரணம் சிங்கிள் எடுத்து ரோஹித் சர்மா இரட்டைச் சதத்துக்கு உதவுவார் என்பதே. தோனி 1 சிக்சருடன் 7 ரன்கள் எடுத்து பெரேரா பந்தில் எல்.பி.ஆனார்.
பாண்டியா 8 ரன்கள் எடுத்து பெரேரா பந்தில் திரிமானே யிடம் கேட்ச் ஆனார். ரோஹித் சர்மா 153 பந்துகளில் 13 பவுண்டரிகள் 12 சிக்சர் களுடன் 208 நாட் அவுட்.

முதல் 10 ஓவர்களில் 33 ரன்களில் இருந்த இந்திய அணி அடுத்த 40 ஓவர்களில் 359 ரன்களை விளாசியது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)