ஜெயலலிதா வுக்கு மகள் பிறந்தது உண்மை என்று பெங்களூருவில் உள்ள அவரின் உறவினர் லலிதா பேசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இது தொடர்பாக லலிதாவை பெங்களூரில் சந்தித்துப் பேசினோம். அவர் கூறுகையில், ‘சினிமாவில் இருந்த வரைக்கும் ஜெயலலிதாவுடன், எங்களுக்கு நல்ல தொடர்பு இருந்தது.
ஆனால், அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கும் எங்களுக்கு மான தொடர்பு நின்று போனது. அதன் பின்னர், எங்க பெரியம்மா ஜெயலட்சுமி மட்டும் அவருடன் அவ்வப் போது பேசிக் கொண்டிருந்தார்.
இந்தச் சூழலில், அவரின் தாயார் சந்தியா இறந்த பிறகு ஒரு சமயம் எங்க பெரியம்மா வை, ஜெயலலிதா அவசரமாக அழைத்தி ருந்தார்.
என் பெரியம்மா சென்று பார்த்த போது ஜெயலலிதா தாய்மை அடைந்து இருந்து ள்ளார். இதை யடுத்து, ஜெயலலிதா வுக்கு, அவர்தான் பிரசவம் பார்த்து விட்டு வந்துள்ளார்.
இதை பெரியம்மா, என் தாயாரிடம் சொன்னதும் அவர் கோபம் அடைந்து விட்டார்.
ஏன் என்றால் எங்க மாமா ஜெயராமன் (ஜெயலலிதா வின் தந்தை) இறந்த பிறகு, எங்க அம்மாவுக்கு, ஜெயலலிதா குடும்பத்தினரைச் சுத்தமாகப் பிடிக்காது.
அந்தக் குழந்தை சோபன் பாபுக்கும் ஜெயலலிதா வுக்கும் பிறந்த குழந்தை என்று பெரியம்மா எங்களிடம் கூறினார்.
அந்தக் குழந்தை தான் அம்ருதாவா என்று எனக்குத் தெரியாது. டி.என்.ஏ சோதனை தான் அதைத் தெளிவு படுத்த வேண்டும்’ என்றார் தெளிவாக.
Thanks for Your Comments