வரன் தேடும் இணையத்தால் சீரழிந்த பெண் !

வரன் தேடும் இணைய தளம் மூலம் பழக்க மாகிய இளம் பெண்ணுடன் உறவு வைத்து விட்டு பின்னர் கொலை யும் செய்ய முயன்ற இளைஞர் கைதான சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 
வரன் தேடும் இணையத்தால் சீரழிந்த பெண் !
இந்தியா வின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத் தாவை சேர்ந்தவர் 26 வயதான சுபைன் பர்மன். 

இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவன த்தில் மென் பொறியா ளராக பணி யாற்றி வந்துள்ளார். 

இந்த நிலை யில் திருமண வரன் தேடும் இணைய தளம் ஒன்றின் மூலம் கொல்கத்தா வை சேர்ந்த மென் பொறியா ளரான 26 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட் டுள்ளது.

இருவருமே மென் பொறியாளர் களாக இருப்பதால் வருமான த்திற்கு பிரச்சினை யில்லை என நம்பிய அப்பெண்ணும், திருமண த்திற்கு சம்மதித் துள்ளார். 

இதன் பிறகு இருவரும் நேரில் சந்தித்து பழகி யுள்ளனர். நாளடை வில் இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந் துள்ளனர். 

மட்டு மின்றி இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்த தால் வாய்ப்பு அமைந்த போதெல் லாம் பாலியல் உறவிலும் ஈடுபட்டு வந்து ள்ளனர். 
இந்த நிலை யில் திருமணம் செய்து கொள்ளும் படி அந்த பெண் வலியுறுத் தியதும், பல்வேறு காரணங் களை அடுக்கி தள்ளி வைத்தே வந்து ள்ளார் சுபைன்.

இதனால் இருவரு க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட் டுள்ளது.  ஒரு கட்டத் தில் தலை யணையை வைத்து மூச்சை நிறுத்தி அந்த பெண்ணை கொலை செய்ய சுபைன் முயன் றுள்ளார். 

ஒரு வழியாக அங்கிருந்து தப்பிய அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படை யில் பெங்களூர், மாரத்த ஹள்ளி பொலிசார் சுபைனை கைது செய்து ள்ளனர்.
Tags: