திருடிய எலிக்கு கிடைத்த குரூர தண்டனை !

0
சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் தன் வீட்டில் திருடிய எலியை மிகவும் வித்தியாச மான முறையில் தண்டித்து இருக்கிறார். 

திருடிய எலிக்கு கிடைத்த குரூர தண்டனை !
இதற்காக அவர் எலிக்கு மது ஊற்றிக் கொடுத்து பின் கொடுமை படுத்தி கொலை செய்து இருக்கிறார்.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள வீடு ஒன்றில் பிரெட் திருடிய குற்றத்திற் காக எலி ஒன்று மிகவும் மோசமான வகையில் தண்டிக்கப் பட்டுள்ளது. 

இதற்காக பிரெட் திருடப் பட்ட அந்த வீட்டு உரிமையாளர் வித்தியாச மான ஒரு தண்டனை முறையை கடைப் பிடித்து இருக்கிறார்.

அதன்படி திருடிய எலிக்கு அவர் முதலில் மது ஊற்றிக் கொடுத்து போதை ஆக்கி இருக்கிறார். 

அதன்பின் அந்த எலியை கொஞ்சம் கொஞ்சமாக கொடுமை படுத்தி பின் மெதுவாக கொலை செய்துள்ளார்.
மேலும் அவர் அந்த எலியின் மீது தீ முட்டி "எங்க வீட்டு பிரெட்டை நல்லா சாப்பிட்டியா, இப்ப நெருப்பு உன்னை நல்லா சாப்பிடுது பார்'' என்று சத்தமாக கூறி இருக் கிறார். 

மேலும் அந்த எலியை கொலை செய்து விட்டு அந்த நபர் வீடியோவில் தான் செய்த செயல் குறித்தும் பேசி இருக்கிறார்.

இவர் எலியை கொலை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)