கோமாளி மீன்கள் எப்படி தப்பிகிறது?

0
கடலில் வாழும் விஷமுள்ள உயிரினம் கடல் தாமரை (Sea anemone). தாமரைப் பூவின் வடிவத்தைப் போன்று இருப்பதால் இந்தப் பெயர். 
கோமாளி மீன்கள் எப்படி தப்பிகிறது?
இதைக் கண்டாலே கடல்வாழ் உயிரினங்கள் அஞ்சி ஓடி விடுகின்றன. ஆனால், இந்தக் கடல் தாமரைக்குள் தான் பெரும் பாலும் வசிக்கிறது கோமாளி மீன் (Clown Fish).

ஆட்டுக்கால் பாயா கிரேவி செய்வது எப்படி?

கடல் தாமரை உண்ணும் உணவின் மீதியையும் அவற்றின் மீதுள்ள ஒட்டு ண்ணிகளையும் கோமாளி மீன்கள் சாப்பிட்டு வளர்கின்றன. 

ஏன் கடல் தாமரைகள் கோமாளி மீன்களை ஒன்றும் செய்வதில்லை?கோமாளி மீன்களால் இரண்டு நன்மைகள் கடல் தாமரை களுக்குக் கிடைக்கின்றன. 

கடல் தாமரையின் ஒட்டுண்ணிகளைக் கோமாளி மீன்கள் சாப்பிட்டு விடுவதால் நோய்களி லிருந்து காப்பாற்றப் படுகின்றன. 

கோமாளி மீன்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருப்ப தால், கடல் நீர் தூய்மைப் படுத்தப்பட்டுப் புதிய காற்று சுவாசிக்கக் கிடைக்கிறது. 

இந்த இரண்டு காரணங்களால் தான் கடல் தாமரைகள், கோமாளி மீன்களை விட்டு வைத்தி ருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். 
அப்படி உதவி செய்யும் பண்போ உணர்வோ கடல்வாழ் உயிரின மான கடல் தாமரை க்கு இருக்க வாய்ப் பில்லை.

கடல் தாமரை அப்படி யெல்லாம் பார்க்காது. தனக்கு உதவுபவர், உதவாதவர் என்றெ ல்லாம் அதற்குத் தெரியாது.  கடல் தாமரையை யார் தீண்டினாலும் மரணம் தான்.

அப்படி யென்றால் கோமாளி மீன்கள் எப்படிக் காப் பாற்றப் படுகின் றன? 

தங்களு க்குத் தேவையான பாதுகாப்பு வளைய த்தைத் தாங்களே தயார் செய்து கொள் கின்றன கோமாளி மீன்கள்.

இந்தியப் பெருங்கடல், ஆஸ்திரேலியக் கடற்கரை, பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கோமாளி மீன்கள் காணப்படுகின்றன. இவற்றில் முப்பது வகைகள் இருக் கின்றன. 

கொஞ்சம் வெப்ப மான பகுதிகளை விரும்பு கின்றன. கோமாளி மீன்கள் 18 செ.மீ. வரை வளரக் கூடியவை. தாவரங் களையும் பிற உயிரினங் களையும் சாப்பிடக் கூடியவை.

கடல் தாமரை மிச்சம் வைக்கும் உணவும் கழிவும் இவற்றின் முக்கிய உணவு. கடல்வாழ் விலங்கு களின் லார்வாக் களையும் சாப்பிடு கின்றன.

பெண் கோமாளி மீன்கள் ஒரு தடவைக்கு 600 முதல் 1500 முட்டைகள் வரை இடுகின்றன. 
இந்த முட்டை களைப் பாதுகாக்கும் மிகப் பெரிய பொறுப்பை ஆண் மீன்கள் எடுத்துக் கொள்கி ன்றன. கோமாளின் மீன்கள் கண்கவர் வண்ண ங்களில் காட்சியளிக்கின்றன.

இவற்றின் வண்ணங் களால் கவரப்பட்டு அருகில் வரும் சிறு உயிர் களைக் கடல் தாமரை உணவா க்கிக் கொள்கிறது. 

கடல் தாமரை யில் வசிப்ப தால் இந்தக் கோமாளி மீன்களை எதிரிகள் நெருங்குவ தில்லை. 

கோமாளி மீன்கள் சளி போன்ற திரவத்தை உற்பத்தி செய்து, தங்களைச் சுற்றி ஒரு கவசம் போல உருவாக்கிக் கொள் கின்றன.
இந்தச் சளி போன்ற திரவம் தான் கடல் தாமரை யிடமிருந்து கோமாளி மீன்களைக் காப்பாற்று கிறது.

பெங்காலி ஸ்டைல் மீன் பிரியாணி செய்வது எப்படி? 

இந்தத் திரவ த்தின் உள்ளே இருக்கும் கோமாளி மீன்களைத் தங்க ளுடைய உணர் திறனால்  கண்டு பிடிக்க முடியாமல் கடல் தாமரைகள் ஏமாந்து போய் விடு கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)