குளிப்பும், நிறைவேற்றும் முறை | Bathing and execution method !

0
நிறைய பேர் தெரியாமல் குழப்ப த்திலும் கேட்க வெட்க்க திலும் இருக்கும் ஒரு விடயம்


“நீங்கள் குளிப்பு கடமை யானவர் களாக இருந்தால் குளித்து உடல் முழுவதை யும் சுத்தம் செய்து கொள்ளு ங்கள். (அல்குர் ஆன் 5:6) 

குளிப்புக் கடமை யாகக் கூடிய சில காரியங் களை இஸ்லாம் கூறு கின்றது.

ஆண், பெண்ணுக்கு அக்காரி யங்கள் ஏற்படு மாயின் குளிப்பு கடமையாகி விடும்.

அவை பின்வருமாறு:

விந்து வெளிப்படல்:

“இச்சை நீர் வெளிப் பட்டால் வுழூச் செய்ய வேண்டும். விந்து வெளிப் பட்டால் குளிக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.

(அறிவிப்பவர் அலி (ரழி), ஆதாரம்: திர்மிதி-114, இப்னுமாஜா-504, அபூதாவூத்-206)

இச்சை நீருக்கும் விந்து க்கும் வித்தியாசம் உண்டு. விந்து (மனீ) கடினமான வெள்ளை நிற திரவப் பொரு ளாகும்.

இச்சை நீர் (மதீ, வதீ) வெள்ளை நிறமான கடின மில்லாத சாதாரண திரவப் பொரு ளாகும்.

இது சிறுநீர் கழிக்குபோது அல்லது இலேசான உணர்வின் போது வெளி யாகும்.

அல்லாஹ் வின் தூதரே! அல்லாஹ் உண்மை யைக் கூற வெட்கப் பட மாட்டான். பெண்ணுக்கு ஸ்கலிதம், ஏற் பட்டால் அவள் குளிப்பது அவசியமா?

என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்க ளிடம் கேட்ட போது, ஆம்! ஈரத்தை அவள் (மேனியில், ஆடை யில்) கண்டால் குளிக்க வேண்டும்” என்று

நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள். (அறிவிப் பவர்: உம்மு ஸுலைம் (ரழி), ஆதாரம்: புகாரி-273, முஸ்லிம்-313, அபூதாவூத்-237)

உடலுறவு கொள்ளல்:

உடலுறவு கொள்ளும் போது விந்து வெளிப் பட்டால் தான் குளிப்பு கடமை என்பது இஸ்லாத் தின் ஆரம்பகால சட்டமாக இருந்தது.

பின்பு இச்சட்டம் மாற்றப் பட்டு (ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் இணைந் தால் விந்து வெளிப் படாவிட்டா லும் குளிப்பு அவசிய மாக்கப் பட்டு) விட்டது.

(ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-209, திர்மிதி-108,111, முஅத்தா-76)

ஒருவர் தனது மனைவி யின் (இரு கால், இரு கை ஆகிய) நான்கு கிளை களுக்கிடை யில் அமர்ந்து,

பின்பு (உறவு கொள்ள) முயற்சித் தால் குளிப்பு கடமை யாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), ஆதாரம்: முஸ்லிம்-348, இப்னுமாஜா-610, நஸாயி-191)

மாத விடாய் ஏற்படல்:

நபியே! மாத விடாய்ப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின் றார்கள். நீர் கூறும் அது (அசுத்த மான) ஓர் உபாதை.

எனவே மாத விடாய் காலத்தில் (உடலுறவு கொள்ளாமல்) பெண் களை விட்டு விலகி இருங்கள்.

அவர்கள் சுத்தமாகும் வரையில் அவர் களை (உடலுறவு கொள்ள) நெருங் காதீர்கள்.

மாத விடாயி லிருந்து (குளித்து) அவர்கள் சுத்தமாகி விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர் களிடம் செல்லுங்கள். (அல்குர்ஆன் 2:222)

“மாத விடாய் ஏற்படும் போது தொழுகையை விட்டு விடு. அது நின்றதும் குளித்து விட்டுத் தொழு” என நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.

(அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி-310, இப்னுமாஜா-621, நஸாயி-202)

மாத விடாய் காலங் களில் விடுபட்ட தொழுகை களை திருப்பி (களா) தொழ வேண்டிய தில்லை.

(புகாரி-310) ஆனால் விடு பட்ட பர்ளான ரமழான் மாத நோன்பை திருப்பி நோற்க வேண்டும்.

தொடர் உதிரப் போக்கு:

மாத விடாய் குறிப் பிட்ட சில நாட்க ளுக்கு ஏற்படும். அந்த நாட்களை கடந்த பின்,

தொடர் ந்தும் இரத்தம் வெளியேறு வதைத் தான் தொடர் உதிரப் போக்கு எனக் கூறப்படும்.

இத்தொடர் உதிரப் போக்குள்ள வர்கள் மாத விடாய் ஏற்படும் நாட் களைக் கணக் கிட்டு விட்டு குளித்து சுத்த     மாகித் தொழ வேண்டும்.

தொடர் உதிரப் போக்கைப் பற்றி நபி (ஸல்) அவர்க ளிடம் கூறிய போது ”அது மாத விடாய் அல்ல.

அது ஒரு நரம்பு சம்பந்தப் பட்ட நோய். (அதனால் தான் இந்த இரத்தம் தொடர்ந்து வெளியே றுகிறது) என்று கூறி னார்கள்.

(ஆதாரம்: புகாரி-316, இப்னு மாஜா-626, முஸ்லிம்-333) நான் சுத்த மாகாதவாறு தொடர்ந்து இரத்தப் போக்குடை யவளாக இருக் கிறேன்.

எனவே நான் தொழுகையை விட்டு விடலாமா? என்று ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர் களிடம் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் (இதற்கு முன் வழக்க மாக) உனக்கு மாத விடாய் ஏற்படும் நாட்களின் அளவுக்கு தொழுகையை விட்டு விடு.

பிறகு குளித்து விட்டு துணியை இறுக்கிக் கட்டி விட்டு தொழு என்று கூறி னார்கள். (அறிவிப்பவர்: உம்முஸலமா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-623, அபூதாவூத்-286, நஸாயீ-208)

பாதிமா பின் அபீ ஹுபைஷ் (ரழி), நபி (ஸல்) அவர் களிடம் வந்து ”நான் தொடர் இரத்தப் போக்குடைய வளாக இருக்கி றேன்.

எனவே தொழுகையை விட்டு விடலாமா? என்று கேட் டார்கள். அதற்கு நபிய வர்கள் அது மாத விடாய் அல்ல! நரம்பு சம்பந்தப் பட்ட நோயாகும்.

உன் மாத விடாய் நாட் களில் தொழுகையை தவிர்த்துக் கொள். பிறகு குளித்து விட்டு ஒவ்வொரு தொழுகை க்கும் வுழூ செய்துக் கொள்.

பாயில் இரத்தம் கொட்டிக் கொண்டி ருந்தாலும் சரியே என்று கூறி னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: இப்னுமாஜா-624, திர்மிதி-125)

பிரசவத் தீட்டு ஏற்படல்:

பிரசவ த்தின் காரண மாக இரத்தப் போக்கு ஏற்படும் போது தொழக் கூடாது. அது நின்ற பின் குளித்து விட்டு தொழ வேண்டும்.

அந்நாட் களில் விடுபட்ட தொழுகை களைத் திருப்பி (களா) தொழ வேண்டி யதில்லை.

குளிக்கும் முறை:

கடமை யான குளிப்பை நிறை வேற்ற முன் இரு கை களையும் மூன்று முறை கழுவ வேண்டும்.

அதன் பின், மர்மஸ் தானத்தை கழுவ வேண்டும். பின்பு வுழூச் செய்ய வேண்டும்.

அதன் பின் தலை யில் மூன்று முறை தண்ணீர் ஊற்றி (உடலை சுத்தப் படுத்தி) க் கொள்ள வேண்டும்.

குளிக்கும் போது வலது பக்கத்தி லிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.

ஆண், பெண் இவ்வாறு கடமை யான குளிப்பை நிறை வேற்ற வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இப்படித் தான் குளிப்பை நிறை வேற்றி யிருக்கி றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கடமை யான குளிப்பை நிறை வேற்றும் போது தம் இரு கைகளை யும் கழுவி விட்டு தொழுகை க்குச் செய்வது போன்று வுழூ செய் வார்கள்.

(அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி),மைமூனா (ரழி), ஆதாரம்: புகாரி-241:265, முஸ்லிம்-317, நஸாயீ-247)

நபி (ஸல்) அவர்கள் குளிப்ப தற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். தமது முன் கைகளின் மீது தண்ணீர் ஊற்றி,

இரண்டு அல்லது மூன்று முறை கழுவி னார்கள். பின்பு வலக்கரத் தால் சிறிதளவு தண்ணீரை இடக்கரத் தால் ஊற்றித் தமது மர்மஸ் தலத்தைக் கழு வினார்கள்.

பின்பு தமது கையைத் தரையில் தேய்த் தார்கள். பின்பு வாய்க் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்து, முகத்தை கழுவி னார்கள்.

இரு கைகளையும் கழுவி னார்கள். பின்னர் தலையை மூன்று முறை கழுவி விட்டு தம் மேனியில் தண்ணீரை ஊற்றிக் கொண் டார்கள்.

பின்பு (குளித்த இடத்தி லிருந்து) சற்று விலகி நின்று தம் கால் களைக் கழுவிக் கொண் டார்கள்.

(அறிவிப்பவர்: மைமூனா (ரழி) (ஆதாரம்: புகாரி-258, முஸ்லிம்-317, நஸாயீ-253, இப்னுமாஜா-573)

நபி (ஸல்) அவர்கள் குளித்த பின் வுழூச் செய்ய மாட்டார்கள் என ஆயிஷா (ரழி) கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி-108, அபூதாவூத்-250, இப்னுமாஜா-579)

அஸ்மா பின்த் ஷகல் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர் களிடம் வந்து மாத விடாய்க் குளிப்பு பற்றிக் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் ”உங்களில் ஒருவர் (மாத விடாய் குளிப்பின் போது) தண்ணீரை யும் இலந்தை இலை களையும் எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள் ளட்டும்.

பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்ந்து தலையின் சருமம் நனையும் வரை கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும்.

அதன் பின்னர் கஸ்தூரி தடவப் பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள் ளட்டும் என்று சொன் னார்கள்.

அதற்கு அஸ்மா (ரழி) அவர்கள் ‘அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டா ர்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹானல்லாஹ், அதனால் சுத்தம் செய்து கொள்ளட்டும் என்று கூறினார்கள்.

உடனே நான் இரத்தம் படிந்த இடத்தில் தடவிக் கொள் என்று பிறர் காதில் விழாத வாறு அதை இரகசிய மாகச் சொன் னேன்.

மேலும் அஸ்மா (ரழி) நபி (ஸல்) அவர் களிடம் பெருந்துடக் கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார்.

அதற்கு நபிய வர்கள் தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துக் கொள்.

பிறகு தலை க்குத் தண்ணீர் ஊற்றி தலையில் சருமம் நனையும் அள வுக்கு நன்கு தேய்த்துக் கொள்.

பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று என்றா ர்கள். (அறிவிப்பர்: ஆயிஷா (ரழி) நூல்: முஸ்லிம்-552)

உங்களில் ஒருவர் தம் மனைவி யுடன் உடலுறவு கொண்டு, மறு முறையும் உட லுறவு கொள்ள விரும் பினால்,

வுழூ செய்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர் கள் கூறி னார்கள். (அறிவிப்பவர்: அபூ ஸயீத், ஆதாரம்: முஸ்லிம்-308, இப்னுமாஜா-587, நஸாயீ-262)

எங்களில் ஒருவர் குளிப்புக் கடமை யான நிலையில் தூங்கலாமா? என்று உமர் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது,

ஆம் வுழூச் செய்து விட்டு தூங்கலாம் என்றார்கள். (அறிவிப்பவர்: உமர் (ரழி), ஆதாரம்: புகாரி-280, முஸ்லிம்-306, நஸாயீ-259) நன்மைக்காக..
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)